நடிகர் விஜய் எனும் தமிழன் சூப்பர் ஸ்டார்னு சொன்னா உங்களால் ஏன் தாங்க முடியலை? சீமான் கேள்வி
சென்னை: நடிகர் விஜய் எனும் தமிழன் சூப்பர் ஸ்டார்னு சொன்னா ஏன் உங்களால் தாங்க முடியவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பட்டம் தம்பி. அது ஒரு பட்டயம் அல்ல. கல்வெட்டு எழுத்து கிடையாது. அந்தந்த காலத்துல தியாகராஜ பாகவதர் இருந்தாங்க.. அதுக்குப் பின் ஐயா எம்ஜிஆர் வந்தாங்க..அதற்குப் பிறகு ஐயா ரஜினிகாந்த் வந்தாங்க- இந்த தலைமுறைல தம்பி விஜய் உயர்ந்து நிற்கிறார்.. அதை ஏற்கனும்.. யதார்த்தம் அதுதானே சரிதானே

இன்னைக்கு இருப்பதில் அதிக வியாபாரம் விஜய்க்குதானே.. அதிக வசூல் அவருக்குதான். யதார்த்தத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். ஏன் ஒரு தமிழன் சூப்பர் ஸ்டார்னு சொன்னா உங்களால் தாங்க முடியலை? என்ன பிரச்சனை உங்களுக்கு? அவர்தான் உயர்நிலையில் இருக்கிறாரே.. ஆமாம்னு சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே..ரஜினிகாந்தும் இதைத்தான் சொல்வார்.. அவரும் இதை ஒப்புக் கொள்வார். இவ்வாறு சீமான் கூறினார்.

பிரச்சனை என்ன?
நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று சிலர் விமர்சித்தனர். இதனை சினிமா விமர்சகர் பிஸ்மியும் சுட்டிக்காட்டியிருந்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் பிஸ்மி வீட்டுக்குள் சென்று ரகளையில் ஈடுபட்டு மிரட்டினர். வாரிசு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமாரும், விஜய்யை சூப்பர் ஸ்டார் என பாராட்டியது சர்ச்சையானது.
ரஜினிகாந்த் ரசிகர்களோ, ரஜினிகாந்தை நிரந்தர சூப்பர் ஸ்டார் என வாழ்த்துகின்றனர். யார் சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்தில் சீமான் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் நிலையானது அல்ல; காலந்தோறும் மாறக் கூடியது என்பது சீமானின் நிலைப்பாடு.












Click it and Unblock the Notifications