நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் இன்று ரத்து.. நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!
சென்னை: நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் சேவை இன்று (ஜூலை 14) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் விரைவு ரயில் தினமும் தாம்பரத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் செங்கல்பட்டு - விழுப்புரம் வழியாக நாகர்கோவில் செல்கிறது. மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வந்தடையும்.

இந்நிலையில் இன்று மாலை 4.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நாளை காலை 7.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் சிறப்பு ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.35 மணிக்கு நாகா்கோவிலிலிருந்து புறப்பட வேண்டிய நாகா்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06012), திங்கள்கிழமை காலை 7.45 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம்- நாகா்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் (06011) ஆகியன நிா்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications