களமிறங்கும் அதிமுகவின் முக்கிய புள்ளி.. களைகட்டும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல்
Recommended Video
சென்னை: மே19 நடைபெற உள்ள, திருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தலுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட வாய்ப்பு கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை மாவட்டத்தில் உள்ளது, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே. போஸ் திடீரென உடல்நலக் குறைவால் இறந்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு வரும், மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் சீட் பெற, அதிமுகவில் கடும் போட்டாபோட்டி நடந்து வருகிறது. ஏனெனில், இது அதிமுக எம்எல்ஏ மறைந்த தொகுதியாகும்.

திட்டம்
இயல்பாகவே, அதிமுகவுக்கு அதிகம் ஆதரவு உள்ள தொகுதி, இதுவாகும். எனவே கோதாவில் களமிறங்க நத்தம் விஸ்வநாதன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2016 சட்டசபை தேர்தலின்போது, நத்தம் விஸ்வநாதன், தனது தொகுதியான நத்தம் தொகுதியில், போட்டியிட ஜெயலலிதாவிடம் கேட்டிருந்தார். ஆனால், நத்தமும் தரப்படவில்லை, அதன்பிறகு அவர் விரும்பிய திருப்பரங்குன்றம் தொகுதியைும் தரவில்லை.

ஆத்தூர் தொகுதி
நத்தன் விஸ்வநாதனுக்கு, கடந்த சட்டசபை தேர்தலில், ஆத்தூர் தொகுதியை ஒதுக்கினார் ஜெயலலிதா. ஆத்தூர் தொகுதி திமுகவின் கோட்டையாக உள்ளது. எனவே, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிடம் போட்டியிட்டு நத்தம் விஸ்வநாதன் தோல்வியடைந்தார். இதன்பிறகு அரசியலில் சரிவர ஆர்வம் காட்டாமல் இருந்தார் நத்தம் விஸ்வநாதன்.

நெருக்கம்
ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணியில் சேர்ந்த அவர், தற்பொழுது ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரிடமும் நெருக்கமாக இருக்கிரார். எனவே, திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட நத்தம் விஸ்வநாதன் விரும்புகிறார். தனக்கு சீட் கிடைக்கும் என நம்புகிறார்.

அதிமுக பேச்சு
எனவேதான், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சீட் கேட்கிறார் என்ற பேச்சு அதிமுகவினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. விஸ்வநாதனின் ஆதரவாளர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள் என்ற பேச்சு மாவட்ட அளவில் பரவலாக பேசப்பட்டும் வருகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications