விழா மேடையில் நெகிழ்ச்சி.. ஸ்டாலினிடம் ஆட்டோகிராப் கேட்டு வாங்கிய நாவலர் நெடுஞ்செழியனின் மருமகள்!
சென்னை: தமிழக முன்னாள் அமைச்சரும், தமிழகத்தின் இடைக்கால முதலமைச்சராகவும் பதவி வகித்த நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாவலர் நெடுஞ்செழியனுக்கு சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் உருவச் சிலை அமைத்தது.
சென்னை சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள நாவலர் நெடுஞ்செழியன் உருவச்சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். நாட்டுடையாக்கப்பட்ட நாவலர்
நெடுஞ்செழியனின் நூல்களுக்கான நூலுரிமை தொகை ரூ.20 லட்சத்தையும் முதல்வர் வழங்கினார்.

நாவலர் நெடுஞ்செழியன் உருவச்சிலை திறப்பு
இந்த விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ''தந்தை பெரியாரையே பேச்சால் கவர்ந்த நாவலர்- பேரறிஞர் அண்ணாவையே ஆளுமைத் திறத்தால் வென்ற பொதுச்செயலாளர்-
முத்தமிழறிஞர் கலைஞரை அன்பால் வசப்படுத்திய பண்பாளர். அறிவார்ந்தோர் அவையில் நடமாடும்பல்கலைக்கழகமெனப் போற்றப்பட்ட அறிவாளர்-என் திருமணத்தை முன்னின்று நடத்திய அன்பாளர்-நெடுஞ்செழியனார்க்கு இன்று சிலை திறந்தோம்.என்றும் அவர் இதயமெல்லாம் வாழ்வார்'' என்று கூறியுள்ளார்.

கல்யாணி மதிவாணன்
இந்த நிலையில் நாவலர் நெடுஞ்செழியன் உருவச்சிலை திறப்பு விழாவில் சுவாரசிய நிகழ்வு நடந்தேறியது.உருவச்சிலை திறப்பு விழாவில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்ட நிலையில் நாவலர் நெடுஞ்செழியனின் மருமகளும், மதுரை காமராசர் பல்கலைகழக முன்னாள் துனை வேந்தருமான கல்யாணி மதிவாணனனும் கலந்து கொண்டார்.

முதல்வரிடம் ஆட்டோகிராப் வாங்கினார்
அப்போது முதல்வர் ஸ்டாலின், கல்யாணி மதிவாணனனுடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் ஆட்டோகிராப் போட்டு தரும்படி முதல்வர் ஸ்டாலினிடம் கல்யாணி வேண்டுகோள் வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட முதல்வரும், அவருக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார். அங்கு இருந்த நிருபர்களிடம் ஸ்டாலினின் ஆட்டோகிராப்பை நெகிழ்ச்சியுடன் காண்பித்த கல்யாணி மதிவாணன் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.

எனக்கு பிடித்த தலைவர்
''எனது வாழ்நாளில் முதல்முறையாக முதல்வர் மு. க. ஸ்டாலிடன்தான் "ஆட்டோகிராப்" வாங்கியுள்ளேன். முதல்வர் ஸ்டாலின் மிக சிறப்பான செயல்பட்டு வருகிறார். செயல்படுகளால் என்னை கவர்ந்து விட்டார். எனக்கு பிடித்த தலைவராகி விட்டார்'' என்று கல்யாணி மதிவாணன் நெகிச்சியுடன் பேசினார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications