ஞானசேகரன் மீது 20 வழக்குகள் நிலுவையில் இருந்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? மகளிர் ஆணையம்
சென்னை: குற்ற வழக்கில் தொடர்புடைய நபரை இயல்பாக நடமாட தமிழக அரசு எப்படி அனுமதித்தது என தேசிய மகளிர் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையம் நேற்று சென்னை வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், போஷ் குழு உறுப்பினர்கள் ஆகியோரிடம் முதல் கட்டமாக விசாரணை நடத்தியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி கேமரா குறித்தும் விசாரணை நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளிடமும் பல்கலைக்கழக காவலாளிகள், விடுதி வார்டன்கள், உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி தலைமையில் 4 பேர் கொண்ட உறுப்பினர்கள் வந்திருந்தனர்.
விசாரணை இன்னும் முழுவதுமாக முடிவடையாத நிலையில் இதுகுறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமார் கூறியதாவது: விசாரணை இன்னும் முடியவில்லை. இன்றும் நடைபெற்றது. தமிழக ஆளுநரை சந்தித்தோம். இந்த விசாரணைக்கு பிறகு பாலியல் வன்கொடுமை குறித்த இறுதிகட்ட அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும்.
பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினோம். குற்ற வழக்கில் தொடர்புடைய ஞானசேகரன் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்திருப்பதாக சொல்கிறார்கள். எனினும் குற்ற வழக்கில் தொடர்புடைய நபரை இயல்பாக நடமாட தமிழக காவல் துறை எப்படி அனுமதித்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23 ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக பிரியாணி கடை நடத்தும் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலியல் பலாத்கார சம்பவத்தால் பெரும் அதிர்வலைகள் எழுந்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அந்த பெண் குறித்த தகவல்கள் அடங்கிய எஃப்ஐஆர் காப்பி கசிந்தது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது.
அது போல் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ 25 லட்சம் இழப்பீடும், அவர் கல்வி கற்கும் வரை தேர்வு கட்டணம், கல்வி கட்டணம் உள்ளிட்டவற்றை பெறக் கூடாது என்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications