நீட் தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்கலையா.. நல்ல வாய்ப்பு.. அவகாசம் நீட்டிப்பு
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு 2020-2021ம் ஆணடில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் மே 3ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 6ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்ககு ஒவ்வொரு ஆண்டும் நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

அந்த வகையில் மே 3ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நீட் தேர்வு நடத்தப்படும் என அந்த தேர்வை நடத்த உள்ள தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்திருந்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 6ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கு www.nta.ac.in / www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் கடந்த டிச.2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றுஅறிவிக்கப்பட்டது. நேற்று நள்ளிரவுடன் விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்து இருந்தது. தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். உட்பட நாடுமுழுவதும் சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஜனவரி 6ம் தேதி நீட்டித்திருப்பதாக தேசிய தேர்வு முகமை இன்று அறிவித்துள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், விண்ணப்பிக்க மறந்தவர்கள் இந்த 6 நாளுக்குள் விண்ணப்பிப்பது நன்று.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications