இதுதான் அப்பாவு! ஆளுநரை பற்றி விமர்சிக்காதீங்க.. இது நமக்கு கருணாநிதி இட்ட கட்டளை.. அசத்தல் உத்தரவு
சென்னை: சட்டசபையில் இன்று ஆளுநரை தனிப்பட்ட ரீதியில் அவையில் விமர்சிக்க கூடாது, எக்காலத்திலும் ஆளுநரை பேரவையில் விமர்சனம் செய்யக் கூடாது என்று சபாநாயகர் அப்பாவு தனது உரையில் குறிப்பிட்டார்.
Recommended Video
தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய நிலையில் மீண்டும் அவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் புதிய மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

அப்பாவு உரை
இன்று சபாநாயகர் அப்பாவு தனது உரையில், இயன்ற அளவில் ஆளுநர் ஒருவர் மாநில அரசு இயற்றும் மசோதா மீது முயன்ற அளவு வேகமாக முடிவு எடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தில் இப்படித்தான் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு இயற்றிய மசோதா மீது ஆளுநர் முடிவு எடுக்க காலதாமதம் செய்துள்ளார். 142 நாட்கள் கழித்து தமிழ்நாடு அரசின் மசோதாவை ஆளுநர் திருப்பி இருக்கிறார். இயன்ற அளவில் விரைவில் என்பதன் பொருள் இதுதானா?

தாமதமான முடிவு
ஆளுநரின் தாமதமான முடிவு வருத்தம் அளிக்கிறது. ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை ஒருதலைபட்சமாக அணுகியுள்ளார் ஆளுநர். அரசியல் சாசனப் பிரிவு 200-ன் கீழான அதிகாரத்தின் கீழ் ஆளுநர் திருப்பி அனுப்பினார். நீட் தேர்வு விலக்கு மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது சரியான செயலாக கருதவில்லை.

அவமானம்
ஆளுநரின் கருத்துக்கள் உயர்மட்டக் குழுவின் அறிக்கையை அவமானப்படுத்தவது போன்று அமைந்துள்ளது. ஏகே ராஜன் அறிக்கையில் பல்வேறு அனுமானங்கள் உள்ளதாக கூறிய ஆளுனரின் கருத்து தவறானது. பேரவைக்கு அனுப்பட்ட கடிதத்தை பொது வெளியிட்டது ஜனநாயகத்தில் ஏற்படையதா என்பதை உரியவர்கள் யோசித்து பார்க்க வேண்டும். ஆளுநரை தனிப்பட்ட ரீதியில் அவையில் விமர்சிக்க கூடாது. எக்காலத்திலும் ஆளுநரை பேரவையில் விமர்சனம் செய்யக் கூடாது.

கருணாநிதி கொண்டு வந்த விதி
இது நமக்கு கலைஞர் இட்ட கட்டளை. அவர் கொண்டு வந்த விதியில் இருந்து பிசகாமல் நாம் செயல்பட வேண்டும். ஆளுநரை தனிப்பட்ட வகையில் விமர்சிக்காமல் அவை மாண்பை காப்பாற்றி வருகிறோம். தமிழ்நாடு சட்ட பேரவை விதி 92 (6-7) படி, குடியரசுத் தலைவர், ஆளுநர், நீதிமன்றத்தினை அவமதிக்கும் வகையில் குறித்து பேச கூடாது. இது ஏற்கனவே இருந்த விதி. தங்கள் கருத்துக்கு வலு சேர்க்க வேண்டும் என்பதற்காக இவர்களை இகழ்ந்து பேச கூடாது.

தவறாக பேசிய சம்பவங்கள்
ஆனால் இந்த சட்டத்தை சிலர் இடையில் நிறுத்தி வைத்து.. அவையிலேயே ஆளுநர் பற்றி தவறாக பேசிய சம்பவங்கள் வரலாற்றில் நடந்துள்ளன. ஆனால் அதன்பின் கருணாநிதி ஆட்சியில் எக்காலத்திலும் ஆளுநர் பற்றி அவையில் விமர்சிக்க கூடாது என்று கூறினார். இதற்கான விதியை அவர் மீண்டும் கொண்டு வந்தார். இதற்காக பேரவை விதிகள் குழு ஆலோசனை செய்து தமிழ்நாடு சட்ட பேரவை விதி 92 (6-7) கொண்டு வரப்பட்டது.

விதியை பின்பற்றுங்கள்
அதோடு இந்த விதியை நிறுத்தி வைக்க கூடாது என்றும் உத்தரவிட்டது. இந்த விதியை பின்பற்றி இன்று சட்டசபையில் எம்எல்ஏக்கள் ஆளுநரை தனிப்பட்ட ரீதியில் அவையில் விமர்சிக்காமல் மாண்புடன் பேச வேண்டும், நீட் விலக்கு மசோதா பற்றி மட்டுமே பேச வேண்டும். சட்ட ரீதியான விஷயங்களை மட்டுமே மாண்புடன் பேச வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications