"அரசே நடத்தும் கல்விக் கொலைகள்.." ஸ்டாலின் கடும் கண்டனம்.. சுபஸ்ரீ பெற்றோரிடம் ஆறுதல்
சென்னை: நீட் தேர்வு குறித்த அச்சத்தால், மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை ஆர்எஸ்புரம் வெங்கடசாமி ரோட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற அரசு ஊழியரின் மகள் சுபஸ்ரீ (19). இவர் கடந்த வருடம் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை. இந்த வருடம் எப்படியும் பாஸாகிவிட வேண்டும் என்பதற்காக, தீவிரமாக படித்து வந்தார்.

செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துவிட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: #NEET குறித்தான அச்சத்தால் கோவையில் மாணவி சுபஶ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனிதாவில் தொடங்கிய மரணம் சுபஶ்ரீ வரை தொடர்கிறது. அரசே நடத்தும் கல்விக் கொலைகள் இவை!

சுபஶ்ரீயின் பெற்றோரிடம் பேசி ஆறுதல் கூறினேன். இந்த மரணத்துக்கு மத்திய- மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும்! கொரோனா காலத்திலும் மாணவர்கள் நலன் குறித்த கவலையின்றி நீட் தேர்வை நடத்த மத்திய அரசு துடிக்கிறது. எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டு மத்திய அரசு செய்வதற்கெல்லாம் கைகட்டிக் கிடக்கிறது மாநில அரசு! இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications