நெல் ஜெயராமனுக்கு உரிய கவுரவம்.. பட திறப்பு விழாவில் அமைச்சர் காமராஜ் உருக்கம்
சென்னை: வேளாண் துறை மூலமாக நெல் ஜெயராமன் கவுரவப்படுத்தபடுவார் என்று படத்திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவர் நெல் ஜெயராமன். புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி கடந்த 6ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் இன்று மறைந்த நெல் ஜெயராமனின் படத்திறப்பு நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதுமிருந்து, பல்வேறு அமைப்புகளை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், அரசியல் கட்சியினர், முன்னிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர் . காமராஜ் கலந்துகொண்டு நெல் ஜெயராமன் உருவபடத்தை திறந்து வைத்து பேசினார்.
அப்போது, பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதற்காக போராடியவர் நெல் ஜெயராமன். விவசாயமும், விவசாயிகளும் இருக்கும் வரை நெல் ஜெயராமனின் பெயர் நிலைத்திருக்கும். கோவில்களுக்கு திருவிழா நடத்தி வருகின்ற காலகட்டத்தில் நெல்லுக்கான ஒரு திருவிழாவை தொடர்ச்சியாக நடத்தி தனிப்பெரும் மனிதராக வெற்றி வெற்றி கண்டவர் நெல் ஜெயராமன்.
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பாரம்பரிய நெல் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அவரது எண்ணங்களை நடைமுறைப்படுத்தியதனடிப்படையில், அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது .
ஆனால் அவரது குடும்ப வாழ்க்கையில் நீண்ட நாட்கள் வாழ்ந்து வெற்றி பெற முடியவில்லை. அவர் எடுத்த முயற்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கும் . வேளாண்மை துறை மூலமாக நெல் ஜெயராமன் கவுரவப்படுத்தபடுவார். இந்த உறுதியை தமிழக முதலமைச்சரே என்னிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications