புயலென புறப்படும் எச்.ராஜா.. மெரினாவில் சீனியர்களோடு சேர்ந்து தர்ணா.. அதிரடி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி, நாளை மெரினா கடற்கரையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, நாளை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்பாக நெல்லை கண்ணன் சர்ச்சையாகப் பேசினார்.

Nellai Kannan issue: H.Raja will sit Dharna on tomorrow in Marina beach

இதையடுத்து பாஜகவினர் அவர் வீட்டுமுன் இன்று காலை போராட்டம் நடத்தினர். பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக, நெல்லை கண்ணன், இன்று திடீரென மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், எச்.ராஜா வெளியிட்டுள்ள ட்வீட்டுகளை பாருங்கள்:


2019ல் நடந்த குற்றத்திற்கு 2019 திலேயே நடவடிக்கை தேவை. இல்லையெனில் 2020 போராட்ட ஆண்டாகத் துவங்கும். இவ்வாறு ஒரு ட்வீட் போட்டுள்ளார். இதன்பிறகு, மற்றொரு ட்வீட்டில்,


நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி 1.1.2020 மாலை 3.00 மணிக்கு மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே திரு.LG, பொன்னார், CPR மற்றும் நான் Sit in Dharna மேற்கொள்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன், மெரினாவில் போராட்டம் நடத்த உள்ளதாக எச்.ராஜா அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+