இப்ப நமக்கு தேவை.. நிறைய டெஸ்ட்டிங், நிறைய பெட்.. ஊர் பெயரை மாத்தி என்ன ஆகபோகுது.. மக்கள் கருத்து
சென்னை: இப்ப நமக்கு நிறைய தேவைப்படுவது டெஸ்டிங்கும் பெட்டும்தான், ஊர் பெயரை மாற்றி என்ன ஆக போகிறது என மக்கள் கருதுகிறார்கள்.
Recommended Video
தமிழகத்தில் உள்ள 1018 நகரங்களின் பெயர்களின் ஸ்பெல்லிங்கை தமிழக அரசு தமிழ் உச்சரிப்பிற்கு ஏற்ப மாற்றிவிட்டது. இதற்கு பலர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.
கொரோனாவின் பிடியில் தமிழகம் சிக்கியுள்ள நிலையில் இந்த பெயர் மாற்றம் தேவையா என்கிறார்கள் நெட்டிசன்கள். இதுகுறித்து வாசகர்களுக்காக சில ட்வீட்டுகள்:
எங்களுக்கு Coimbatore தான் வேணுமுங்க... Koyampuththoor வேண்டாமுங்க- இப்படியும் சில குரல்
அரசு
கோவிட் 19 க்காக டெஸ்டிங்கையும் மருத்துவமனை படுக்கைகளையும் இரட்டிப்பாக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அரசோ மயிலாப்பூர், ஆரணி, சைதாப்பேட்டையில் O, A, P ஆகியவற்றை இரட்டிப்பாக்கியுள்ளது.
ஜாதி முறை
தமிழகத்தில் நகரங்களின் பெயர்களை மாற்றுவதற்கு பதிலாக ஜாதி முறையை ஒழித்தால் நன்றாக இருக்கும் என்கிறார் இந்த வலைஞர்.
ரொம்ப கடினம்
Coimbatore என்ற பெயரை தமிழில் மாற்றும் அளவுக்கு அது கடினமாக இருந்ததில்லை. இதை விட Koyampuththoor இதுதான் மிகவும் கடினமாக இருக்கிறது.
ஒரு மார்க்
நான் 5ஆம் வகுப்பு படித்த போது ஒரு கேள்விக்கு Madurai என்பதற்கு பதிலாக Mathurai என எழுதிவிட்டேன். தற்போது அரசே பெயர் மாற்றங்களை செய்துவிட்டதால் நான் எழுதியது சரிதான். அதனால் 5ஆம் வகுப்பு ஆசிரியர் எனக்கு ஒரு மார்க் கொடுத்தே ஆக வேண்டும்.