திருவள்ளுவரோட அப்பன் யாருடா? அரசியல் சாசன கிளார்க் அம்பேத்கர்டா.. RBVS மணியன் பேச்சு- பெரும் சர்ச்சை
சென்னை: திருவள்ளுவர், அம்பேத்கர், திராவிட இயக்க அறிஞர்கள் குறித்து இந்துத்துவ சிந்தனையாளரான ஆர்.பி.வி.எஸ். மணியன் ஒருமையில் இழிவாக விமர்சித்து பேசியதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு சமூக வலைதளங்களில் புகார்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஆர்.பி.வி.எஸ். மணியன் என்பவர் பேசியிருப்பதாவது: பறையர் எவனாவது பள்ளர்ல கல்யாணம் முடிப்பானா? நீங்க எல்லாம் அடிச்சுட்டு நிற்கிறவனுக..

அந்த அம்பேத்கர்தான் கான்ஸ்டிடியூசனை கொடுத்தார்னு பல பேரு எழுதிகிட்டு இருக்கானுக.. பேசிகிட்டு இருக்கானுக.. இப்ப இருக்கிற ஆட்சிக்காரனும் இதையே சொல்லிகிட்டு இருக்கானுங்க..துதி பாடிகிட்டு இருக்கானுக
அரசியல் சட்டத்தை உருவாக்கியது யார்னு சேர்மன் பேரை போட்டால் ராஜேந்திர பிரசாத் பெயரைத்தான் போடனும். அங்கு கிளார்க்காக வேலை பார்த்தவன், டைப் அடிச்சவன், டைப்புக்கு ப்ரூப் பார்த்தவன்.. அதான் அம்பேத்கர். அவர் தன்னுடைய மூளையில் இருந்து அரசியல் சாசனத்தை எழுதியதாக எங்கேயும் எழுதி வைக்கலை.
கிராமங்களில் அக்ரஹாரங்களில் பிராமணர்கள் இருக்கிறாங்க என்பான்.. அங்கிட்டு துலுக்கனுக இருக்காங்க என்பான்.. இங்கிட்டு காலனி ஆட்கள்னு சொல்லுவான். அவனுக்கு பேரு கூட கிடையாது.. காலனி ஆட்கள். எந்த காலனியில் எவன் ஒட்டிகிட்டு வந்தான்னு எனக்கும் தெரியாது. அவனுக எல்லாம் ஷெட்யூல்டு கேஸ்ட்னு சொல்றம்ல அவனுக.

இந்த பிராமணனை இந்துன்னு சொல்ல வைக்கிறதுக்கே ரொம்ப காலமாச்சு.. அவன் வைதீகன், வைதீக தர்மம்னு சொன்னான்.. சனாதன தர்மத்தை பின்பற்றுகிறோம்னு சொன்னான்.. இந்த நாடு இந்து நாடாக இருக்கனும்னா மோடியைத் தவிர, பிஜேபியை தவிர வேறு யாரும் காப்பாத்த முடியாது.
எவனோ ஒருத்தன் திருவள்ளுவர், திருக்குறள்னு சொல்லிப்புட்டான்.. திருவள்ளுவர்னு ஒரு ஆளே கிடையாது. அந்த ஆளு ஒருத்தர் இருந்தார்னு சொல்றது கற்பனை.. அதைவிட அந்த ஆள் திருக்குறளை எழுதினார்னு சொல்றது நல்ல கற்பனை..
ராமர் பிறந்த நட்சத்திரம் எனக்கு தெரியும். ராமர் பிறந்த நாளை ஊர்தோறும் கொண்டாடுகிறோம். நீ வள்ளுவர் என்னைக்கு பிறந்தார்னு சொல்லுவியா? உன்னால சொல்ல முடியுமா? அப்பா அம்மா யாருன்னு தெரியுமாடா? திருவள்ளுவரோட அப்பன் பேரு தெரியுமாடா? ஆதிங்கிறான்.. பகவான்கிறான்.. அவனெல்லாம் வாழ்ந்ததுக்கு அடையாளம் இருக்காடா... இவ்வாறு ஆர்விபிஎஸ் மணியன் இழிவாகவும் ஒருமையிலும் பேசியிருக்கிறார்.
இந்தப் பேச்சை அப்படியே ட்விட்டரில் பகிர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு போலீஸ் உள்ளிட்டோரின் எக்ஸ் தள ஐடிகளுக்கும் அனுப்பி வைத்து இப்படி இழிவாக பேசுகிற நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications