சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடே எதிர்ப்பதால் மல்லையாவும், நீரவ் மோடியும் பலசாலிகளா ரஜினி சார்? இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல்ல

Google Oneindia Tamil News

Recommended Video

    7 தமிழர், பாஜக, 2.0 பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்!-வீடியோ

    சென்னை: நாடே எதிர்த்தால் ஒருவர் பலமானவராகிவிட முடியுமா என்ற கேள்வி ரஜினிகாந்த்தை பின்தொடர்ந்து வர ஆரம்பித்துள்ளது.

    நடிகர் ரஜினிகாந்த் இன்று போயஸ் இல்லத்தில் திடீரென நிருபர்களை சந்தித்தார். 7 தமிழர் விடுதலை மற்றும் பாஜக குறித்த தனது செய்தியாளர் சந்திப்பு கருத்து போன்றவை குறித்து அப்போது, அவர் விளக்கம் அளித்தார்.

    இந்த விளக்கத்தில் தெளிவுக்கு பதிலாக மேலும் பல சர்ச்சைகளைத்தான் அவர் உருவாக்கிவிட்டார்.

    [இன்னும் முழுசா அரசியல்ல ஈடுபடல.. எல்லாம் வீட்டுக்கு போங்க.. மறுபடியும் முதல்ல இருந்தா ரஜினி?]

    பக்கா பாஜக ஆதரவு

    பக்கா பாஜக ஆதரவு

    ரஜினிகாந்த் பக்காவாக, பாஜக ஆதரவாளர் என்பதை இன்றைய பிரஸ் மீட்டில் வெளிப்படுத்திவிட்டார். பாஜக ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு, அதை மக்கள் தீர்மானிப்பார்கள். நான் இப்போது கருத்து கூற மாட்டேன் என்ற ரஜினிகாந்த், பாஜகதான் பலமான கட்சி என்பதை மட்டும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார். 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் அந்த ஒருவர்தானே, பலசாலி என்று மோடியை தூக்கி வைத்து பேசினார் ரஜினிகாந்த்.

    பூனைக்குட்டி வெளியே

    பூனைக்குட்டி வெளியே

    ரஜினிகாந்த்தின் இந்த கருத்துக்கள், அவரை பாஜக ஆதரவாளர் என்பதை உறுதி செய்துவிட்டன. என்னதான் மறைத்தாலும் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. தூத்துக்குடி விவகாரம், ஐபிஎல் போராட்டம் என அனைத்திலும் அவர் ஆள்பவர்களுக்கு ஆதரவாகத்தான் கருத்து கூறி வந்தார் என கூறியபோது நம்பாதவர்களுக்கு இன்று அவரே விளக்க உரை கொடுத்துவிட்டார். ரஜினிகாந்த் கருத்துக்கு பொதுமக்கள், சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    மல்லையா, நீரவ் மோடி

    நாடே மல்லைய்யாவையும், நீரவ் மோடியையும் எதிர்க்கிறது. ரஜினி Sir அப்போ யார் பலசாலி Sir? கொஞ்சம் சொல்ல முடியுமா?, என்று கேள்வி எழுப்பியுள்ளார் இவர்.

    விளக்கம்

    ரஜினிகாந்த் ஆர்வத்தோடு விளக்கம் அளிக்கப்போய், இப்படித்தான் சொதப்பியது என்று கிண்டல் செய்கிறது இந்த மீம்.

    அடிவாங்குபவர்

    ரஜினி மாம்ஸ் பீ லைக்; பத்து பேரு சேந்து அடிக்குறவன் பலசாலி இல்லடா, பத்து பேர் சேந்து அடிச்சாலும் நின்னு அடிவாங்குறான் பாரு அவன்தான்டா பலசாலி..

    நேற்று அட்மினா

    ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் பற்றி தெரியாத அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் அல்ல-ரஜினி. அப்ப நேற்று தெரியாதுன்னு சொன்னது இவரோட அட்மினா இருக்குமோ?

    English summary
    Netizens troll Rajinikanth for his comment on BJP in his latest press meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X