48 மணி நேரத்தில் பொங்க போகிறது கடல்..28ம் தேதி முதல் மழை பெய்யும்- வானிலை மையம்
நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: இந்திய பெருங்கடல் - தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சில தினங்களாகவே தமிழகத்தின் நிறைய இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சற்று அதிகமாகவே பெய்து வருகிறது.
ஆனால் சென்னையில் மழையே இல்லை.. ஏதோ தூறல், சாரல் என்று பொழிந்து வருகிறதே தவிர பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மழை இல்லை. அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, சென்னைவாசிகளுக்கு ஒரு நிம்மதியை தந்துவருகிறது.

குறைந்த தாழ்வுநிலை
இந்நிலையில்தான் புயல் வரப்போவதாக ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வு மண்டலம்
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாம்.

பலத்த காற்று
அதாவது நாளை முதல் தென்மேற்கு வங்ககடல் பகுதி, இந்திய பெருங்கடல், இலங்கை கடல்பகுதி இந்த கடற்பகுதிகளில் காற்று பலமாக வீசப்போகிறது. 30-40 கிமீ வேகத்தில் காற்று வீச கூடும் என்று கூறுகிறார்கள். ஆனால் நாளை மறுநாள் 26-ம் தேதி மற்றும் 27-ஆம் தேதி இதே காற்று, 40-50 கிலோ மீட்டருக்கு வீசப்போகிறதாம்.

மழை பெய்யும்
காற்று இப்படி வீசபோகிறது என்றால், தென்தமிழகம், கடலோர மாவட்டங்களில் மழை கொட்ட போகிறதாம். அதுவும் 29ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கட்டாயம் பெய்யும் என்று வானிலை மையம் கூறுகிறது!

ஆயத்த பணிகள்
எனவே, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என்ற எச்சரிக்கை வந்துள்ளதால், அதற்கான ஆயத்த பணிகளிலும், முன்னேற்பாட்டு நடவடிக்கைகளிலும் மாவட்ட நிர்வாகங்கள், மீனவர்கள், பொதுமக்கள் ரொம்பவே மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications