இனி குற்றவாளிகள் ஈஸியா தப்ப முடியாது.. மாஸ் காட்டும் சென்னை காவல்துறை.. அதிநவீன கார்கள்! வேற லெவல்
சென்னை: சமீப காலங்களாக காவல்துறையின் கட்டமைப்புகள் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை மாநகர காவல்துறைக்கு புதிய வாகனங்கள் பெறப்பட்டிருக்கின்றன.
தேசிய அளவில் அதிக மக்கள் கொண்ட நகரங்களின் பட்டியலில் 5 வது இடத்தில் சென்னை இருக்கிறது. ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். மட்டுமல்லாது ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வேலைக்காக தினமும் வந்து செல்கின்றனர். எனவே குற்றங்களும் அதிக அளவு நடக்கின்றன. இதனை கட்டுப்படுத்தும் பணியில் பெருநகர காவல்துறையினர் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாட்டின் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னை முதல் இடத்தில் இருக்கிறது.

நாட்டில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரம் எது? என சமீபத்தில், பன்முகத்தன்மை ஆலோசனை நிறுவனமான அவதார் குழுமம், ஆய்வை மேற்கொண்டிருந்தது. அதில் சென்னைதான் பாதுகாப்பான நகரம் என்பது தெரிய வந்திருக்கிறது. தென்னிந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களுரை விட சென்னைதான் பாதுகாப்பானதாக இருக்கிறது.
இதற்கு காவல்துறையினரின் உழைப்புதான் முழு காரணம். எனவே காவலர்களின் பணியை எளிமையாக்கும் விதமாக, சென்னை காவல்துறை நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது புதியதாக 53 கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் 25 ஹூண்டாய் கிரெட்டா கார்களும் அடங்கும். தமிழக காவல்துறைக்கு என ஹூண்டாய் கிரெட்டா ரக கார்கள் வாங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
குற்றவாளிகளை துரத்தி பிடிக்கவும், உடனடியான செயல்பாட்டுக்கும் இந்த கார்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது எஸ்யுவி ரகத்தை சேர்ந்ததாக இருந்தாலும், வேகத்தில் மாஸ் காட்டும். இதன் அதிகபட்ச வேகம் 195 கி.மீ. 1497 சிசி திறன் கொண்ட என்ஜின் 113.18 குதிரை திறனை உற்பத்தி செய்கிறது. எனவே காவல்துறையினர் சேஸிங்கில் இருந்து குற்றவாளிகள் எளிதில் தப்பிக்க முடியாது.

கிரெட்டா தவிர, எட்டு இன்னோவா கிறிஸ்டா கார்கள், 20 பொலிரோ ஜீப்புகள் என மொத்தம் ரூ.6.50 கோடியில் 53 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், சட்டம் -ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளர்களுக்கு இந்த கார்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும். இவற்றை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து காவல்துறை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications