சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்தமான் கடலில் 4-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!

Google Oneindia Tamil News

சென்னை: அரபிக் கடலில் 2 புயல்கள் உருவான நிலையில் அந்தமான் கடலில் வரும் 4-ந் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது.

அரபிக் கடலில் கியார், மகா புயல்கள் உருவாகின. இந்த புயல்கள் ஓமனை நோக்கி நகருகின்றன. ஏற்கனவே வடகிழக்குப் பருவமழையால் தமிழகம், கேரளாவில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

New Low pressure area is likely to form over north Andaman sea

இதனால் மாலத்தீவுகள், லட்சத்தீவு, கேரள கடலுக்கு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 4-ந்தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வடமேற்கு திசையில் மத்திய கிழக்கு வங்கக்கடலில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்!தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்!

இதனால் அந்தமான் கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 4 மற்றும் 5-ந் தேதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன.

English summary
According to the Meteorological Department's forecast that a low pressure area is likely to form over north Andaman sea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X