பண்ணை வீடுகள், ரிசார்ட்களில் நிசப்தம்.. களையிழந்த ஸ்டார் ஓட்டல்கள்.. நியூஇயர் கொண்டாட்டத்திற்கு தடை?
ஸ்டார் ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என்கிறார்கள்
சென்னை: புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில், ஸ்டார் ஹோட்டல்களிலும், பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்படும் என்றே தெரிகிறது.
கடந்த வருடமும் கொரோனா தலைதூக்கி இருந்தது.. அதனால் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது..
காதலியை நள்ளிரவில் சந்திக்கப் போன பிளஸ் 2 மாணவன்... தாலி கட்டச்சொன்ன ஊர் மக்கள் - 6 பேர் கைது
இந்த வருட இறுதியிலும் கொரோனா முழுமையாக நீங்கவில்லை என்றாலும், கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள் தமிழகத்திலும் ஒமைக்ரான் வைரஸ் பரவ ஆரம்பித்துவிட்டது..
புத்தாண்டு
ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலருக்கு அதற்கான அறிகுறிகள் உள்ளதாக தெரிகிறது.. அதனால், தமிழக அரசு மீண்டும் தீவிரத்தை கையில் எடுத்து வருகிறது.. வழக்கமாக, புத்தாண்டு என்றால் கொண்டாட்டம் நிறைந்து காணப்படும்.. புத்தாண்டுக்கு முதல்நாளில் இருந்தே பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராவார்கள்.. ஆனால், இந்த முறை, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது..
மெரினா பீச்
மெரினா பீச்சில் வருகிற 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 2 நாட்கள் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. மெரினா பீச்சை போலவே, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடப்பது வழக்கம்.. ஆனால் கடந்த முறை அனுமதி தரப்படவில்லை.. அந்த வகையில் இந்த முறையும் இதற்கான அனுமதி கிடைக்காது என்றே சொல்கிறார்கள்..
விதிமுறைகள்
இன்னும் இதை பற்றி எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை. இதை பற்றி அரசும் இன்னும் முடிவெடுக்கவில்லை.. நட்சத்திர ஓட்டல் ஓனர்களும் எந்தவிதமான ஆலோசனையும், முடிவும் எடுக்கவில்லை.. எனினும், யாரும் கூட்டம் கூடக்கூடாது என்ற பொது விதி நடைமுறையில் உள்ளதால், நிச்சயம் பண்ணைவீடுகள், ஸ்டார் ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என்றே தெரிகிறது...
ஹோட்டல்கள்
காரணம், புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே ஒரு மாதத்துக்கு முன்பேயே அதற்கான ஏற்பாடுகளில் ஸ்டார் ஹோட்டல்கள் ஈடுபட்டுவிடும் நிலையில், இப்போது அதற்கான அறிகுறியே தென்படவில்லை.. அதனால் இந்த வருடமும் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என்றே நம்பப்படுகிறது... ஒமிக்ரான் பரவி வரும் சூழலில், இப்படி தடை விதிக்கப்படும் ஒருவகையில் நல்லதுதான் என்று பொதுமக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.