நள்ளிரவு 1 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டம் கூடவே கூடாது.. சென்னை போலீஸ் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நள்ளிரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டத்தில் ஈடுபட சென்னை காவல் துறை தடை விதித்துள்ளது.

2019-ஆம் ஆண்டு முடிவடைந்து புதிய ஆண்டான 2020 ஜனவரி 1-ஆம் தேதி பிறக்கிறது. இதையொட்டி டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்க மக்கள் அனைவரும் தயாராகி விடுவர்.

New Year celebration: Restaurants should not allow to conduct at 1 am

இதையொட்டி சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனையும் கோயில்களில் வழிபாடும் நடத்தப்படும். மேலும் மெரினா, எலையட்ஸ் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான இளைஞர்கள் கூடி புத்தாண்டை வரவேற்பர்.

அப்போது கூட்டம் கூட்டமாக குழுக்கள் குழுவாக கேக் வெட்டி ,பட்டாசு வெடித்து கொண்டாடுவர். இன்னும் சிலர் சென்னை மற்றும் ஈசிஆர் சாலைகளில் நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டை கொண்டாடுவர்.

இதற்காக அங்கு கேளிக்கை நடனங்கள் நடத்தப்படும். அப்போது மதுபோதையில் நடனம் ஆடுவது, நீச்சல் குளத்தில் குளிப்பது உள்ளிட்டவற்றால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருக்கிரது. மேலும் சிலர் பெண்களுடன் இந்த விடுதிகளில் தங்குவதால் தேவையற்ற பிரச்சினைகள் எழும்.

இதனால் இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய இடத்தில் போலீஸார் உள்ளனர். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு நட்சத்திர, கேளிக்கை விடுதிகளுக்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+