Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜமேஷா முபினுக்கு நெருக்கமானவர்.. திருச்சூர் சிறையில் இருக்கும் 13வது நபரிடம் விசாரிக்க என்ஐஏ திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் 13 ஆவது நபரிடம் விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கோவையில் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு முதல் நாள் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே காரில் ஜமேஷா முபின் என்பவர் காரில் வந்தார். காரில் யாரோ வெடிபொருட்களை கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

NIA decided to inquire 13 th person in Coimbatore car cylinder blast incident

இதையடுத்து போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து உஷாரான ஜமேஷா முபின் காரில் இருந்த சிலிண்டரை வெடிக்கச் செய்ததாக தெரிகிறது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தீபாவளி நாளன்று கூட்டநெரிசலை பயன்படுத்தி பெரிய உயிர் சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என தெரிகிறது.

இந்த நிலையில் கோவை போலீஸார் விசாரணை நடத்தியதில் கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக் உள்ளிட்ட 11 பேர் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து 11 பேரையும் தேசிய புலனாய்வு துறை அமைப்பினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கோவை உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த முகமது இட்ரீஸ் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று மாலை கைது செய்தனர்.

சிலிண்டர் வெடிப்பில் 12 ஆவது நபராக கைதான இட்ரீஸை சென்னை அழைத்து வந்தனர். இவர் முபினின் நண்பர். இந்த நிலையில் தமிழகத்தில் 30 இடங்களில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சென்னையில் 3 பேரது வீட்டிலிருந்து பென்டிரைவ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கேரளா மாநிலம் திருச்சூர் சிறையில் உள்ள முகமது அசாருதீனிடம் விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இவர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சூர் சிறையில் இருக்கிறார். இவரை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஜமேஷா முபின் இறப்பதற்கு முன்பு சிறையில் அசாருதீனை சந்தித்தது தெரியவந்தது. முகமது அசாரூதின் விசாரிக்கப்பட்டால் அவர் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் விசாரிக்கப்படும் 13 ஆவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+