Nilgris Exit Poll 2024: நீலகிரியில் வெல்லப்போவது யார்? ஆ ராசா vs எல் முருகன்.. தந்தி டிவி கணிப்பு
சென்னை: நீலகிரி தொகுதியில் வெல்லப்போவது யார் என்பது குறித்து தந்தி டிவி தேர்தலுக்கு பிந்தைய கணிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த கணிப்பில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ ராசா வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை முதல் வெளியாகி வருகிறன. தமிழகத்தை பொறுத்தவரை திமு காங்கிரஸ் கூட்டணியே வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணிப்புகள் வெளியாகி உள்ளன.

தொகுதி வாரியான நிலவரத்தை பொறுத்தவரை 'மலைகளின் அரசி' என்று அழைக்கப்படும் உதகமண்டலத்தை தலைமையிடமாக கொண்ட நீலகிரி லோக்சபா தொகுதியில் திமுகவே வெல்ல வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் கூறியிருந்தன
இந்த நீலகிரி தொகுதியை பொறுத்தவரை உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே நீலகிரி மாவட்டத்தில் இருக்கின்றன. மேட்டுப்பாளையம் தொகுதி கோவை மாவட்டத்தில் இருக்கிறது. அவினாசி திருப்பூர் மாவட்டத்திலும், பவானிசாகர் தொகுதி ஈரோடு மாவட்டத்திலும் உள்ளன. மொத்தம் உள்ள ஆறு தொகுதியில் 3 மலையிலும், 3 சமவெளியிலும் இருக்கிறது. கலாச்சாரம் முதல் மக்களின் மனநிலை வரை 6 தொகுதியிலும் 3 விதமாக இருந்தது.
நீலகிரி தொகுதியில் கடந்த முறை திமுகவின் ஆ ராசா தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தியாகராஜனை விட சுமார் 2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் கடந்த முறை அதிமுக, பாஜக இணைந்து கூட்டணியாக போட்டியிட்டன. இந்த முறை தனித்தனியாக களம் இறங்கி உள்ளன.
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கணிப்பினை தந்திடிவி வெளியிட்டுள்ளது. இதில் நீலகிரி தொகுதியில் இந்த முறை திமுக சார்பில் ஆ ராசா 36 சதவீதம் வாக்குகள் பெற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்செல்வன் 31 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும் தந்தி டிவி கணித்துள்ளது. பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல் முருகன் 24 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும் தந்தி டிவி கணிப்பில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications