Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்னும் ஆறே வருஷம்..! நாம் சீனாவையே ஓவர்டேக் செய்வோம் பாருங்க.. நம்பிக்கை தரும் நிர்மலா சீதாராமன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்போது தமிழகம் வந்துள்ளார். இந்தியத் தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் (IIITDM) 10வது பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் உள்ள டாப் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை இந்தியர்கள் தான் தலைமை தாங்குவதாகத் தெரிவித்தார்.

 சீனாவை ஓவர்டேக்

சீனாவை ஓவர்டேக்

பட்டமளிப்பு விழாவில் அவர் மேலும் பேசுகையில், "ஐநாவின் 2019ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின் படி, இந்தியாவின் உழைக்கும் வயது மக்கள் தொகை 2028ஆம் ஆண்டில் சீனாவை ஓவர்டேக் செய்யும். அதாவது 2028இல் சீனாவைக் காட்டிலும் வேலை செய்யக் கூடிய மக்கள் தொகை இந்தியாவில் மிக அதிகமாக இருக்கும். அத்துடன் நின்றுவிடாது. இந்தியாவில் உழைக்கும் வயது மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்கும்.

 இழைக்கும் மக்கள் தொகை

இழைக்கும் மக்கள் தொகை

2036ஆம் ஆண்டுக்குள் நமது மக்கள்தொகையில் 65% பேர் உழைக்கும் வயதில் இருப்பார்கள். அது 2047 வரை 65%ஆகவே இருக்கும். இதன் மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். இன்று இந்த உலகம் காண்பதை விட அப்போது நமது உற்பத்தித் திறன் மிக அதிகமாகவே இருக்கும்.

 இந்திய சிஇஓ-க்கள்

இந்திய சிஇஓ-க்கள்

இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள் மிகச் சிறந்த நிர்வாகிகளைக் கொடுக்கிறது. உலகின் டாப் 58 நிறுவனங்களின் சிஇஓ-க்களாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களே உள்ளனர். இந்தியர்கள் தலைவர்களாக இருக்கும் 11 பன்னாட்டு நிறுவனங்களின் வருவாய் பல டிரில்லியன் டாலர் மதிப்புடையது ஆகும்.

 கல்வி முறை

கல்வி முறை

எனவே, நமது நாட்டின் கல்வி முறையைக் குறை சொல்ல முடியாது. சொல்லப் போனால், சர்வதேச அளவில் நமது உயர் கல்வி சிறப்பாகவே உள்ளது. ஆனால் இன்னும் கூட அதை நாம் மேம்படுத்த வேண்டும். கற்பித்தல்- கற்றல் அனுபவத்தை நாம் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்,. அப்போது தான் நம்மால் முதலிடத்தில் தொடர முடியும்.

 ஸ்டார்ட்-அப்

ஸ்டார்ட்-அப்

சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து ஸ்டார்ட் அப்களில் 25 சதவீதம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் இப்போது 100 யூனிகார்ன்கள் உள்ளன. ஏனென்றால் இப்போது நமது நாட்டில் ஸ்டார்ட்-அப் சூழல் சிறப்பாக உள்ளது. இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு மட்டும் 250 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

 தொழில்முனைவோர்

தொழில்முனைவோர்

இந்திய மாணவர்கள் மற்றவர்களுக்கு வேலை தரும வகையில் தொழில்முனைவோராக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அனைவரும் தொழில்முனைவோராக மாறுவது சாத்தியமான ஒன்று தான். தொழில்துறைக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு நாம் செயல்பட்டால் போதும். சர்வதேச அளவில் தலைசிறந்த மாணவர்களை நாம் தொடர்ந்து உருவாக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+