வருமான வரியில் மாற்றமில்லை.. ஆனாலும் 12 லட்சம் வரை ஒரு ரூபாய் கூட வரி கட்ட தேவையில்லை.. எப்படி?
சென்னை: 2024 பட்ஜெட்டில் வருமான வரி சிலாப்பில் மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை.. இருந்த போதிலும் வருசத்துக்கு 12 லட்சம் வருமானம் உள்ளவர்கள், இப்படி செய்தால், ஒரு ரூபாய் கூட வருமான வரி கட்ட தேவையில்லை.. பொருளாதார நிபுணர்கள் கூறியதை பார்ப்போம்.
இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் 2024 இல் எந்த விதமான வருமான வரி சலுகையும் அறிவிக்கவில்லை.. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 8 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளதாக கூறினார். வருமான வரி வரம்பில் எந்தமாற்றமும் இல்லை என்று கூறினார். மேலும் 7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டியது தற்போது இல்லை என்று கூறினார். இதனால் வருமான வரி உச்ச வரம்பு மாற்றம் மற்றும் வருமான வரி சலுகை, 80 சி வரம்பு உயர்வை எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்..

அதேநேரம் கடந்த ஆண்டு தான் 5 லட்சம் ரூபாய் என்பதை 7..25 லட்சம் ஆக வருமான வரி வரம்பை மாற்றி அறிவித்திருந்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். பழைய முறையில் வரி சேமிப்பு விலக்குகள் உள்ளன. புதிய வருமான வரி விகிதங்களில் எந்த சலுகையும் இல்லை என்ற நிலையே இந்த ஆண்டும் நீடிக்கிறது. தற்போதைய நிலையில் புதிய வருமான வரி முறைப்படி 7.25லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை..
அதேநேரம் மாத சம்பளம் வாங்குவோர் சரியான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்தால் வருமான வரி அதிக அளவில் கட்ட வேண்டியது இல்லை. வருமான வரி என்பது பழைய திட்டத்தின் படி ஐந்து லட்சத்திற்கு மேலும் புதிய திட்டத்தின்படி 7 லட்சத்து 25 ஆயிரத்திற்கு மேலும் இருநதால் வருமான வரி கட்ட வேண்டும். இந்த வரிகளை மாதம் மாதம் உங்கள் சம்பளத்தில் நிறுவனங்கள் பிடித்து வருமான வரி அலுவலகத்திற்கு கண்டிப்பாக அனுப்பி வைக்க வேண்டும். அதேநேரம் அரசு சொல்வது படி, சேமிப்பு, மருத்துவம் உள்ளிடடவற்றில் கட்டினால உங்களுக்கு பிடிக்கப்பட்ட வருமான வரியை திரும்ப பெறலாம்.
புதிய வருமான வரி முறையில் பெரியதாக சலுகைகள் என்பது இல்லை.. நேரடியாக வரியை கட்ட வேண்டியது அவசியம் ஆகும். சுமார் 7 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு இந்த திட்டம் மிகப்பெரிய வரம் ஆகும். அதேநேரம் பழைய வரிமுறையில் பல நன்மைகள் உள்ளது. பழைய வரிமுறையினை தேர்வு செய்தால் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்கள் கூட 100 சதவீதம் வருமான வரியை சேமிக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.. எப்படி என்பதை பார்ப்போம்.
நீங்கள் வருமான வரி தாக்கல் செய்பவர் என்றால் கண்டிப்பாக ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்றால் பழைய வரி முறை மூலமாக மட்டுமே நீங்கள் வருமான வரியை கிளைம் செய்து சேமிக்க முடியும். புதிய வரிமுறைகளில் அதற்கு வாய்ப்பு இல்லை.
12 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் வரி சேமிப்புக்கு ரெடி என்றால் இதை எல்லாம் பாருங்கள். என்னவென்றால், நீங்கள் கண்டிப்பாக கணிசமான பணத்தை முதலீடு செய்ய வேண்டும் அதேபோல் உங்களது வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் படி வருமான வரிக்கழிவுகளை கிளைம் செய்ய வேண்டும்.பழைய வரிமுறையை தேர்வு செய்யக்கூடிய மாத வருமானம் பெறும் ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய பொதுவான வரிக்கழிவுகள் பட்டியலை இப்போது பார்ப்போம்.
பொதுவாக வருமான வரி செல்லுத்துவோருக்கு வருமான வரி சட்டத்தின் பிரிவு 16 இன் கீழ் 50,000 ரூபாய் நிரந்தமாக கழிக்கப்படும். அடுத்ததாக வருமான வரி சட்டத்தில் பிரிவு 80C யின் கீழ் ஹவுஸிங் லோன், குழந்தைகளின் கல்வி கட்டணம், எல்ஐசி, போஸ்ட் ஆபிஸ் திட்ட முதலீடுகள், பிராவிடண்ட் ஃபண்ட், நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் உள்பட அனைத்து சேமிப்புகளுக்கும் சேர்த்து அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரையில் கிளைம் கொள்ளலாம்.
அடுத்ததாக வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80CCD (1B) -இன் கீழ் மத்திய அரசின் நேஷனல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் ரூ.50,000 ரூபாய் கிளைம் செய்ய முடியும். அடுத்தாக வருமான வரி சட்டத்தின் பிரிவு 80D -இன் கீழ் உங்களுக்கோ, உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் பிரீமியம்காக செலுத்திய பேமெண்ட்களுக்கு 25,000 ரூபாய் வரை கிளைம் செய்து கொள்ளலாம். அதேநேரம் உங்கள் வயதான பெற்றோர்களுக்கு பெற்றோர்களின் மெடிக்கல் இன்சூரன்ஸ் பிரீமியம்காக செலுத்திய பேமெண்ட்க்கு 50,000 வரையில் கிளைம் அனுமதிக்கப்படுகிறது.
அடுத்ததாக வருமான வரி சட்டத்தின் பிரிவு 24 24(b) இன் கீழ் வீட்டு கடனுக்கான வட்டிக்கு 2,00,000 ரூபாய் வரை ஒரு ஆண்டுக்கு கிளைம் செய்ய அனுமதிக்கிறது மத்திய அரசு. மேற்கண்ட விஷயங்களில் சரியாக முதலீடு செய்ய வேண்டும். இன்னும் சரியாக விளக்குவது என்றால், லீவ் டிராவல் அலவன்ஸ், டெலிபோன் பில் ரீஇம்பர்ஸ்மெண்ட், ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம்கள் போன்றவற்றில் கண்டிப்பாக முதலீடு செய்ய வேண்டும்.
அதோடு அரேசே ஸ்டாண்டர்ட் டிடக்ஷன்களாக 50000 வரை தருவதால், மொத்தமாக மேற்கண்ட எல்லா முதலீடுகள் மூலம் வருமானத்தை 5 லட்ச ரூபாய்க்கு கீழ் குறைவாக நீங்கள் காட்ட வேண்டும். மேலே சொன்னபடி சரியாக செய்தால் உங்களது வருமானம் 4,96,500 ரூபாயாக இருக்கும். இப்போது நீங்கள் இந்த வருமானத்திற்கு எந்த ஒரு வரியையும் செலுத்த தேவையில்லாமல் போகும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். அதேநேரம் உங்கள் வருமானம், கடன், உங்கள் சேமிப்பு, ஆகியவற்றை கணக்கிட்டு முதலீடு செய்யுங்கள். தெளிவான ஆலோசனை பெற விரும்பினால், உங்கள் பகுதியில் உள்ள ஆடிட்டர்களிடம் கேளுங்கள். அவர்கள் இன்னும் தெளிவாக விளக்கம் தருவார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications