ஒரு பைசா கூட உயராத பெட்ரோல் டீசல் விலை... இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்கும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐந்து மாநில தேர்தல் காரணமாக இந்தியாவில் கடந்த 17 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 93.11 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு லிட்டர் டீசல் 86.45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் 91.17 ரூபாய்க்கும் டீசல் 81.47 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

No change in petrol and diesel price in past 17 days

அதேபோல மும்பையில் பெட்ரோல் 97.57 ரூபாய்க்கும், டீசல் 88.60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.. அடுத்த வாரம் வாக்குப்பதிவு நடைபெறும் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு 91.35 ரூபாய் மற்றும் 84.35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சர்வதேச அளவில் இன்று கச்சா எண்ணெய் ஒரு பேரல் டாலருக்கு வர்த்தகம் ஆகிறது. ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ளதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ. 100ஐ தாண்டியது.

இருப்பினும், சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து கடந்த 17 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இருந்தாலும் தற்போது பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் விலையே அதிகம் என்பதால் அதைக் குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால், மத்திய, மாநில அரசு கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, வரியைக் குறைக்க முன்வரவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+