பரபரப்புக்காக இப்படி எல்லாம் சொல்லாதீங்க.. வேட்பாளர் தேர்வில் நடந்த சம்பவம்.. ஒரே போடு போட்ட இபிஎஸ்!
சென்னை: அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கருத்து வேறுபாடு நிலவுவதாக வெளியான செய்திகளுக்கு முதல்வர் பழனிச்சாமி பளிச் பதில் அளித்து இருக்கிறார். வேட்பாளர் தேர்வு குறித்து முக்கிய விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
2021 சட்டசபை தேர்தலுக்காக அதிமுக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. பாஜகவிற்கு 20, பாமகவிற்கு 23, தேமுதிகவுக்கு (12-18) இடங்கள் ஒதுக்கி மிகப்பெரிய கூட்டணியை அதிமுக உருவாக்கி வருகிறது.
இந்த நிலையில் அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக நேற்று நிறைய செய்திகள் பரவின. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் நிறைய இழுபறி நீடிப்பதாக செய்திகள் பரவின.

கருத்து வேறுபாடு
ஓபிஎஸ் கோரிக்கையை முதல்வர் பழனிசாமி விரும்பாததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி நிலவுவதாக வெளியான செய்திகளுக்கு முதல்வர் பழனிச்சாமி பதில் அளித்து இருக்கிறார். அதில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், மக்களை சந்தோஷப்படுத்தும் வகையில் இந்த அறிக்கை அமைந்து இருக்கும்.

விளக்கம்
பொருளாதார சமநிலையை ஏற்படுத்தும் வகையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை அமையும். வேட்பாளர் பட்டியல் தயார் ஆகிக் கொண்டு இருக்கிறது. வேகமாக பணிகள் நடந்து வருகிறது. இதில் ஆலோசனைகள் நடந்து வருகிறது. அனைத்தும் விரைவில் அறிவிக்கப்படும்.

அறிக்கை
வேட்பாளர் தேர்வில் எந்த விதமான இழுபறியும் நீடிக்கவில்லை. எல்லாம் சுமுகமாக சென்று கொண்டு இருக்கிறது. ஊடகத்திலும், பத்திரிகையிலும் விறுவிறுப்பாக, பரபரப்பிற்காக செய்தி வருவதற்காக இப்படி எல்லாம் பேசுகிறார்கள். இப்படி பேச வேண்டியது இல்லை. அதிமுகவில் அப்படி எந்த விதமான இழுபறியும் இல்லை.

முடிவு
எல்லா முடிவுகளையும் விரைவில் எடுப்போம். வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை திட்டமிட்டபடி தாமதமின்றி தயாரிக்கப்பட்டு வருகிறது, என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்த பேட்டியின் போது துணை முதல்வர் ஓ.பி.எஸ் உடன் இருந்தார் . நேற்று முதல்வர் - துணை முதல்வர் இடையே கருத்து வேறுபாடு என்று கூறப்பட்ட நிலையில் வதந்திகள் அனைத்துக்கும் முதல்வர் பழனிச்சாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் .
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications