அதிமுகவை எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது.. திண்டுக்கலில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
திண்டுக்கல்: அதிமுகவை எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுகவை எவ்வளவோ பேர் உடைக்க பாக்குறாங்க.. முடக்க பாக்குறாங்க.. ஆனால் தொண்டர்களாகிய உங்களால் இவை எல்லாம் தவிடுபொடியாக்கிவிடுவோம்.. அதிமுக உயிரோட்டம் உள்ள கட்சி.. எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது.. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லை.. ஆனால் அவர்களுக்கு இங்கு இருக்கின்ற மக்கள் தான் வாரிசு என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார். இன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

எத்தனையோ பேர் உடைக்க பார்க்கிறார்கள்
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் படுகின்ற துன்பத்தில் இருந்து அவர்களை விடுவிக்க அதிமுக முன்னின்று செயல்படும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இரு பெரும் தலைவர்களும் மக்களுக்காக வாழ்ந்தனர். அந்த இரு பெரும் தலைவர்களுக்கு வாரிசு இல்லை. இங்கு இருக்கின்ற மக்கள் நீங்கள்தான் வாரிசு. இந்த கட்சியை எவ்வளவோ பேர் முடக்கப் பார்க்கிறார்கள்.. எத்தனையோ பேர் உடைக்கப் பார்க்கிறார்கள்.. இதையெல்லாம் உங்கள் துணையோடு தவிடுபொடியாக்கி வருகிறோம்.
எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது
அதிமுக தொண்டர்கள் நிறைந்த கட்சி. அதிமுக உயிரோட்டமுள்ள கட்சி. அதிமுகவை எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது. அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டன் கூட எம்.எல்.ஏ ஆகலாம்.. எம்.பி ஆகலாம்.. ஏன், முதலவராக கூட ஆகலாம். அதிமுக என்ற ஒரே கட்சியில்தான் தொண்டர் ஒருவர் பொதுச் செயலாளர் ஆகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் திமுகவை விமர்சித்தும் எடப்பாடி பேசினார். அவர் கூறுகையில், "தமிழகத்தில் கொலை, கொள்ளை நடக்காத நாட்களே இல்லை என்ற அளவுக்கு ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாட்களே இல்லை. கஞ்சாவுக்கு அடிமையாகி மாணவர்கள் வாழ முடியாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. வரும் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றுவோம்.." என்றார்.
ஓபிஎஸ், டிடிவி, சசிகலா
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கூறி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த நிலையில், அவரை அனைத்து வித பதவியில் இருந்தும் நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நவடிக்கை எடுத்தார். இதனை தொடர்ந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பலரும் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து வருகிறார்கள்.
செங்கோட்டையனை பதவியில் இருந்து நீக்கியது அதிகாரத்தின் உச்சம் என்றும், அவரது அதிகார உச்ச நிலைக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என்று ஓ பன்னீர் செல்வம் தெரிவித்தார். இதேபோன்று இந்த நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது என்று சசிகலா கருத்து தெரிவித்தார். டிடிவி தினகரன் கெடுவார் கேடு நினைப்பார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
-
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்?












Click it and Unblock the Notifications