மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம்.. தமிழக அரசு கைவிட கோரவில்லை.. ரயில்வே அமைச்சர் யூ டர்ன்!
சென்னை: மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டத்தில் தமிழ்நாடு அரசுடன் எந்த நிலப் பிரச்சனையும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். தனுஷ்கோடி திட்டம் குறித்த தனது பதிலை செய்தியாளர்கள் தவறாக புரிந்து கொண்டதாக கூறியுள்ள அஸ்வினி வைஷ்ணவ், அன்று ஆலையில் இருந்த இரைச்சல் காரணமாக கேள்வியையும் தெளிவாக கேட்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 10ஆம் தேதி சென்னை வந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வந்த அம்ரித் பாரத் 2.- படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அஸ்விணி வைஷ்ணவ், தமிழ்நாட்டில் ரயில்வே துறை சார்பாக செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மதுரை - தூத்துக்குடி அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த திட்டம் வேண்டாம் என்று கூறி தமிழக அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமான கடிதம் அனுப்பப்பட்டது. இதன் காரணமாக மத்திய அரசு இந்த திட்டத்தை முழுமையாக கைவிட்டது என்று கூறினார். இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் தரப்பில், முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி. தமிழ்நாடு அரசு ஒருபோதும் அப்படி கூறவில்லை. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவே வலியுறுத்தி வந்தோம். இந்த திட்டத்திற்காக 926.68.84 ஹெக்டே நிலம் எடுப்பு செய்து ரயில்வே துறைக்கு ஒப்படைக்குமாறு மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டுக் கொண்டதில், இரு பகுதியாக பிரிக்கப்பட்டு நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் இந்த திட்டத்தை கைவிடக்கோரி கடிதமோ, வாய்மொழியாகவோ தமிழ்நாடு அரசால் ரயில்வே துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் தமிழக அரசு சார்பாக திட்டம் கைவிடும்படி கோரப்பட்டதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. இந்த திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்கி உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசு தமிழ்நாட்டை பின்னோக்கி இழுத்து செல்கிறது. மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்தை ரத்து செய்த திமுக அரசின் முடிவுக்கு எதிராக ஜன.20ல் விருதுநகர் மாவட்ட மக்களுடன் இணைந்து அருப்புக்கோட்டையில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில் மதுரை - தூத்துக்குடி ரயில் பாதை திட்டம் தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். அதில், அன்றைய தினம் ஆலையில் இருந்த இரைச்சல் காரணமாக கேள்வியை தெளிவாக கேட்க முடியவில்லை. இதனால் தனுஷ்கோடி திட்டம் குறித்த எனது பதிலை செய்தியாளர்கள் தவறாக புரிந்து கொண்டனர். மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை பொறுத்தவரை தமிழக அரசுடன் எந்த நிலப்பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications