தேர்தல் முடியும் வரை தமிழக காவலர்களுக்கு விடுப்பு கிடையாது- டிஜிபி பேக்ஸ் மெசேஜ்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் முடியும் வரை தமிழக காவலர்களுக்கு விடுப்பு கிடையாது என டிஜிபி பேக்ஸ் மூலம் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்கள், வாக்குச் சாவடிகள், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், வாக்கு எண்ணும் மையங்களில் போலீஸார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்படுவர்.
இதனால் போலீஸார் யாரும் விடுப்பு எடுக்க வேண்டாம் என டிஜிபி சுற்றறிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த அறிக்கையில், தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்தல் முடியும் வரை அவசர சூழல் இருந்தாலொழிய காவலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விடுப்போ, பர்மிஷனோ கிடையாது என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary
DGP fax message says that No leave shall be given to police officers and men till elections over.
Story first published: Tuesday, March 9, 2021, 22:57 [IST]