கொதிக்கும் நீரில் புழுக்கள் இனி சாகாது! பட்டு உற்பத்தியில் ஐஐடி புரட்சி! விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்
சென்னை: இந்தியாவில் பட்டு புடவைகளுக்கு பெண்கள் மத்தியில் எப்போதுமே சிறப்பான வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.. அதனால்தான் பட்டுப் புடவைகள் உற்பத்திக்கு பட்டுப்புழு வளர்ப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்நிலையில் மும்பை ஐஐடியின் கிராமப்புற பகுதிகளுக்கான தொழில்நுட்ப மாற்று மையம் ஒரு மாபெரும் சாதனையினை நிகழ்த்தியுள்ளது. அது என்ன தெரியுமா?
அழகான பட்டு துணிகளுக்கு பின்னால் கோடிக்கணக்கான பட்டுப் புழுக்களின் மரணம் மறைந்துள்ளது.. இதனால் பலரும் வேதனைப்படுவதுண்டு...

பொதுவாக பட்டு கிடைக்க வேண்டுமானால், பாரம்பரிய முறையில் பட்டுப் புழுக்கள் தங்களை சுற்றி கூடுகளை உருவாக்கிய பிறகு பட்டு நூலைப் பிரித்தெடுக்க அந்த புழுக்களை கூடுகளோடு சேர்த்து கொதிக்கும் நீரில் போட்டு அழிப்பார்கள்... அப்போதுதான் தேவையான பட்டு இழைகள் கிடைக்கும்..
பட்டுப்புழுக்கள்
ஆனால், இந்த உயிர்க்கொலை முறையினை முற்றிலுமாக ஒழிக்கும் விதமாக மும்பை ஐஐடியின் கிராமப்புற பகுதிகளுக்கான தொழில்நுட்ப மாற்று மையம் ஒரு மாபெரும் சாதனையினை நிகழ்த்தியுள்ளது...
ஆம், கடந்த 3 வருடங்களாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த விஞ்ஞானிகள் இப்போது புழுக்களை கொல்லாமலேயே பட்டு நூலை பிரித்தெடுக்கும் முறையை வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளனர். இந்த புதிய புதிய தொழில்நுட்பத்திற்கு "ஜீவோதயா" என்று பெயரும் வைத்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சி திட்டத்திற்கு கோல் இந்தியா நிறுவனம் தனது சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் முழுமையான நிதியுதவியை செய்துள்ளது.
ஜீவோதயா திட்டம்
ஜீவோதயா திட்டத்தின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? இதில் பட்டுப்புழுக்களின் இயற்கை வாழ்வாதாரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. வழக்கமாக மல்பெரி இலைகளை உண்டு வளரும் புழுக்கள் ஒரு கட்டத்தில் தங்களை சுற்றி உருண்டையான கூடுகளை கட்டிக்கொள்ளும்.
ஆனால் இந்தப் புதிய முறையில் புழுக்கள் கூடுகளை கட்டாமல் ஒரு சமதள பரப்பில் பட்டு இழைகளை மட்டும் உதிர்க்குமாறு அவற்றுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறதாம்.. இதனால் பட்டு இழைகளை சேகரிக்கப் புழுக்களை கொல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. இதன் மூலம் பட்டுப்புழுக்கள் தங்களின் முழு வாழ்க்கை சுழற்சியையும் நிறைவு செய்து அழகான பட்டுப் பூச்சிகளாக பரிணாமம் அடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மும்பை ஐஐடி வரலாற்று சாதனை
இந்த தொழில்நுட்பம் வெறும் ஆராய்ச்சி நிலையில் இருந்து வந்த நிலையில், இப்போதுதான் பயன்பாட்டு வரப்போகிறது.. இது கண்டிப்பாக, பட்டு விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், இம்முறை மூலம் பட்டு உற்பத்தியை மேலும் எளிமையாகவும் விரிவாகவும் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு விவசாயிகளுக்கு நிலையான மற்றும் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
அந்தவகையில் மும்பை ஐஐடியின் தனித்துவம் வாய்ந்த ஜீவோதயா திட்டம், தற்போது குறிப்பிடத் தகுந்த அளவிலான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
அகிம்சை பட்டு
இந்தியாவில் பட்டு புடவைகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் இந்த அகிம்சை வழி பட்டு உற்பத்தி முறை நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற போகிறது.. அத்துடன் சுற்றுச்சூழல் மற்றும் உயிரினங்களுக்கும் பாதிப்பில்லாத இந்த டெக்னாலஜி, ஜவுளி துறையில் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இனி வரும் காலங்களில் பட்டு புடவைகளின் அழகில் பட்டுப்புழுக்களின் உயிர் தியாகம் இருக்காது என்பதை மும்பை ஐஐடி விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications