Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடகிழக்கு பருவமழை..தமிழகத்தில் இயல்பை விட 2% அதிகம்..எங்கு கூடுதல் மழை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 1 முதல் இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2% கூடுதலாக பெய்துள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பு அளவான 404 மி.மீ.-க்கு பதில் 412 மி.மீ. பெய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 63% அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மே மாதம் தொடங்கி அக்டோபர் வரை நீடித்தது. அதே போல வடகிழக்குப் பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கி விட்டு விட்டு பெய்து வருகிறது. குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

 North east Monsoon 2% more than normal in Tamil Nadu says Met office

மாண்டஸ் புயல் கடந்த வாரம் கரையைக் கடந்த பின்னரும் பல ஊர்களில் கனமழை நீடிக்கிறது. இந்த நிலையில் கேரளா கர்நாடகாவை ஒட்டிய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கியது. நவம்பர் மாதத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்து மழை படிப்படியாக குறைந்தது. நவம்பர் மாத இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பையொட்டி இருக்கும்.

இந்தியப் பெருங்கடலின் இருமுனை துருவங்கள் நெகட்டிவ் என்ற அளவில் உள்ளதால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை. பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை 'லாநினோ' என்ற நிலையில் உள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு காரணிகள் மூலம் மழைக்கான வாய்ப்பு உள்ளதால் தற்போது மழையின் வாய்ப்பை உறுதியாக கணிக்க முடியாது என்று கூறினார்.

வடகிழக்குப் பருவமழை தாமதமாக தொடங்குவதால் தாமதமாக வெளியேறும் என்றில்லை. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தாலுகா அளவில் வானிலை முன்னறிவிப்புகள் வழங்குவதற்கு சோதனை முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த வாரம் தமிழகத்தில் இயல்பு அளவை விட 91 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. மேலும், 16 மாவட்டங்களில் கடந்த வாரம் மழை பதிவாகவில்லை, 22 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை பதிவாகியுள்ளது என்று நவம்பர் 25ஆம் தேதி கூறியிருந்தார்.

மாண்டஸ் புயல் கடந்த 9ஆம் தேதி கரையைக் கடந்தது. இதனையடுத்து பல மாவட்டங்களில் பருவமழை கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2% கூடுதலாக பெய்துள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பு அளவான 404 மி.மீக்கு பதில் 412 மி.மீ. பெய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 63% அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் கரையை கடந்து 3 நாட்கள் ஆன பின்னரும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட் டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து விட்டு விட்டு மழை நீடித்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அவை வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 201 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இந்த மாவட்டங்களில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி 631 ஏரிகள் நிரம்பி உள்ளன.

இதனிடையே தமிழகம் புதுச்சேரியில் இன்னும் 5 நாட்களுக்கு லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்தவாரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பொதுவாக தமிழகத்தில் டிசம்பர் இறுதியில் வடகிழக்கு பருவமழை விடை பெற ஆரம்பிக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வரப்போகும் நிலையில் இந்த ஆண்டு இயல்பை விட 2 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+