வட மாவட்டங்களில் இன்று கடைகள் அடைப்பு.. வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையனின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த. வெள்ளையனின் உடல் நாளை மாலை அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. மறைந்த வெள்ளையனின் உடலுக்கு பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். வெள்ளையனின் மறைவையொட்டி, தமிழகத்தில் இன்றும், நாளையும் 2 நாட்கள் கடையடைப்பு பேராட்டம் நடக்கிறது.
போராட்டங்கள்: தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவராக பதவி வகித்து வந்தவர் த.வெள்ளையன்... பல வருடங்களாகவே, வணிகர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார்.. அத்துடன் பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளார்..

76 வயதுடைய வெள்ளையன் கடந்த சில வருடங்களாகவே நுரையீரல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்ததுடன், அதற்கான மருந்துகளையும் எடுத்து வந்தார். உடல்நலம் மோசமானதால், கடந்த 3ம் தேதி அமைந்தக்கரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. ஆரம்பத்தில் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்ட வெள்ளையன், கடந்த 5தேதி முதல் ஐசியூவுக்கு மாற்றப்பட்டார்.. டாக்டர்கள் தீவிரமான சிகிச்சை தந்துவந்தபோதிலும், பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.
தலைவர்கள் இரங்கல்: வெள்ளையன் மறைவை அடுத்து வணிகர் சங்க கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட உள்ளன. தமிழகம் முழுவதிலுமிருந்து வணிகர்கள் சென்னைக்கு வந்து நேரில் அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர். வெள்ளையன் மறைவுக்கு தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
வெள்ளையன் மறைவையொட்டி முதல்வர் ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்திருந்தார்.. வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக அறிக்கையும் வெளியிட்டிருந்தார். வெள்ளையன் உடல் நேற்றைய தினம், பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைப்பட்ட நிலையில், இன்று அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
உடல் அடக்கம்: அவரது சொந்த ஊரான திருச்செந்தூரை அடுத்த பிச்சிவிளை கிராமத்தில் உள்ள தோட்டத்தில் அவரது தந்தையின் கல்லறைக்கு அருகே வெள்ளையனின் உடல் நாளை மாலை 4 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது..
இதனிடையே, வெள்ளையனின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழகத்தில் கடையடைப்பு நடத்தப்போவதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது.
கடையடைப்பு: தமிழகத்தில் இன்றும், நாளையும் 2 நாட்கள் தமிழகத்தில் கடையடைப்பு பேராட்டம் நடைபெற உள்ளது. அதன்படி இன்று வடமாவட்டங்களிலும், நாளை தென்மாவட்டங்களிலும் கடையடைப்பு நடத்தப்பட உள்ளது. இந்த தினங்களில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையில் செயல்படும் கடைகள் அடைக்கப்பட உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை வணிகர் சங்க பேரவையின் பொதுச்செயலாளர் சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications