பாஜக கூட்டணிக்கு ஷாக் கொடுத்த அடுத்த கட்சி.. அதிமுகவுடன் துணை நிற்போம்.. பூவை ஜெகன் மூர்த்தி அறிக்கை
சென்னை: பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக எடுக்கும் முடிவுக்கு உறுதுணையாக நிற்போம் என்று புரட்சி பாரதம் கட்சி அறிவித்துள்ளது.
அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் தொடர்வதாக அக்கட்சி தலைவரும் எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் மூர்த்தி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை புரட்சி பாரதம் வரவேற்கிறது. சமீப காலமாக திராவிட தலைவர்களையும் அதிமுக மாநாட்டையும் விமர்சித்து வந்த பாஜகவை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது.

அதிமுகவின் தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இயங்கி வரும் நிலையில், அவர்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக நிற்போம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சியும் ஓர் அங்கம் வகிக்கும் என்பதை கட்சியின் தலைவர் என்ற முறையில் தெரிவித்துக்கொள்கிறேன்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் பங்கேற்று புரட்சி பாரதம் கட்சி தேர்தலை எதிர்கொள்ளும். என்.டி.ஏ,இந்தியா கூட்டணி என்று எந்த ஒரு கூட்டணியிலும் பங்கேற்காமல் அதிமுக தலைமையில் தனி கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். என்று தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications