ராகுல் டான்ஸ்.. இதுக்கு பேரு என்ன சார்? "மணிப்பூரை மறந்துட்டு ஆட்டம்”.. கொதிக்கும் பாஜக நிர்வாகி!
சென்னை: மணிப்பூர் பற்றி எரியும்போது நாடாளுமன்றத்தின் மத்தியில் அமர்ந்துகொண்டு வெட்கமின்றி சிரிக்கிறார் பிரதமர் மோடி." என ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்த நிலையில், ராகுல் நேற்று பழங்குடி மக்களுடன் நடனமாடிய வீடியோவைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன்.
காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அண்மையில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

சூரத் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கியதால் மீண்டும் எம்.பி பதவியை பெற்றார். அதன்பிறகு நாடாளுமன்றம் சென்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீதும் மத்திய பாஜக அரசின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மீண்டும் எம்.பி பதவியைப் பெற்ற பிறகு முதல்முறையாக தனது சொந்த தொகுதியான வயநாட்டிற்கு ராகுல் காந்தி சென்றார். இதற்காக நேற்று காலை டெல்லியில் இருந்து இன்டிகோ விமானம் மூலம் கோவை வந்தடைந்த ராகுலுக்கு, தமிழ்நாடு மற்றும் கேரள காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராகுல் பயணத்தின் ஒரு பகுதியாக ஊட்டி அருகேயுள்ள முத்தநாடு கிராமத்தில் தோடர் பழங்குடியின மக்களை சந்தித்துப் பேசினார். ராகுலுக்கு அவர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கினர். தோடர் இன மக்களின் பாரம்பரிய உடையை விரும்பி அணிந்துகொண்ட ராகுல் காந்தி, அவர்களுடன் இணைந்து நடனமாடினார். இதுதொடர்பாக வீடியோக்கள், சமூக வலைதளங்களில் பரவின.
பாரதப் பிரதமர் @narendramodi பாராளுமன்றத்தில் சிரிக்கிறார் என்று திட்டமிட்டு பொய்யான அவதூறு பரப்புகிறார்.. இபபோது மணிப்பூரை மறந்து நடனம் ஆடுகிறார்.. ராகுல் காந்தி. இதை என்னவென்று சொல்வது @blsanthosh pic.twitter.com/KBxhKA3IRb
— Karu.Nagarajan (@KaruNagarajan) August 13, 2023
இதுதொடர்பான வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ள தமிழ்நாடு பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், "பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் சிரிக்கிறார் என்று திட்டமிட்டு பொய்யான அவதூறு பரப்புகிறார். இபபோது மணிப்பூரை மறந்து நடனம் ஆடுகிறார் ராகுல் காந்தி. இதை என்னவென்று சொல்வது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப் பதில் அளித்துப் பேசியது குறித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது பேசிய அவர், "பல மாதங்களாக மணிப்பூர் பற்றி எரிந்து வருகிறது. கொலை, பாலியல் வன்கொடுமைகள் தொடர்கின்றன. ஆனால், நாடாளுமன்றத்தின் மத்தியில் அமர்ந்துகொண்டு வெட்கமின்றி நகைச்சுவையாகப் பேசிச் சிரிக்கிறார் பிரதமர் மோடி." எனக் காட்டமாக கூறியிருந்தார்.
-
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது!












Click it and Unblock the Notifications