ராகுல் டான்ஸ்.. இதுக்கு பேரு என்ன சார்? "மணிப்பூரை மறந்துட்டு ஆட்டம்”.. கொதிக்கும் பாஜக நிர்வாகி!
சென்னை: மணிப்பூர் பற்றி எரியும்போது நாடாளுமன்றத்தின் மத்தியில் அமர்ந்துகொண்டு வெட்கமின்றி சிரிக்கிறார் பிரதமர் மோடி." என ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்த நிலையில், ராகுல் நேற்று பழங்குடி மக்களுடன் நடனமாடிய வீடியோவைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன்.
காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அண்மையில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

சூரத் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கியதால் மீண்டும் எம்.பி பதவியை பெற்றார். அதன்பிறகு நாடாளுமன்றம் சென்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீதும் மத்திய பாஜக அரசின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மீண்டும் எம்.பி பதவியைப் பெற்ற பிறகு முதல்முறையாக தனது சொந்த தொகுதியான வயநாட்டிற்கு ராகுல் காந்தி சென்றார். இதற்காக நேற்று காலை டெல்லியில் இருந்து இன்டிகோ விமானம் மூலம் கோவை வந்தடைந்த ராகுலுக்கு, தமிழ்நாடு மற்றும் கேரள காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராகுல் பயணத்தின் ஒரு பகுதியாக ஊட்டி அருகேயுள்ள முத்தநாடு கிராமத்தில் தோடர் பழங்குடியின மக்களை சந்தித்துப் பேசினார். ராகுலுக்கு அவர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கினர். தோடர் இன மக்களின் பாரம்பரிய உடையை விரும்பி அணிந்துகொண்ட ராகுல் காந்தி, அவர்களுடன் இணைந்து நடனமாடினார். இதுதொடர்பாக வீடியோக்கள், சமூக வலைதளங்களில் பரவின.
பாரதப் பிரதமர் @narendramodi பாராளுமன்றத்தில் சிரிக்கிறார் என்று திட்டமிட்டு பொய்யான அவதூறு பரப்புகிறார்.. இபபோது மணிப்பூரை மறந்து நடனம் ஆடுகிறார்.. ராகுல் காந்தி. இதை என்னவென்று சொல்வது @blsanthosh pic.twitter.com/KBxhKA3IRb
— Karu.Nagarajan (@KaruNagarajan) August 13, 2023
இதுதொடர்பான வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ள தமிழ்நாடு பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், "பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் சிரிக்கிறார் என்று திட்டமிட்டு பொய்யான அவதூறு பரப்புகிறார். இபபோது மணிப்பூரை மறந்து நடனம் ஆடுகிறார் ராகுல் காந்தி. இதை என்னவென்று சொல்வது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப் பதில் அளித்துப் பேசியது குறித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது பேசிய அவர், "பல மாதங்களாக மணிப்பூர் பற்றி எரிந்து வருகிறது. கொலை, பாலியல் வன்கொடுமைகள் தொடர்கின்றன. ஆனால், நாடாளுமன்றத்தின் மத்தியில் அமர்ந்துகொண்டு வெட்கமின்றி நகைச்சுவையாகப் பேசிச் சிரிக்கிறார் பிரதமர் மோடி." எனக் காட்டமாக கூறியிருந்தார்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications