ராகுல் டான்ஸ்.. இதுக்கு பேரு என்ன சார்? "மணிப்பூரை மறந்துட்டு ஆட்டம்”.. கொதிக்கும் பாஜக நிர்வாகி!
சென்னை: மணிப்பூர் பற்றி எரியும்போது நாடாளுமன்றத்தின் மத்தியில் அமர்ந்துகொண்டு வெட்கமின்றி சிரிக்கிறார் பிரதமர் மோடி." என ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்த நிலையில், ராகுல் நேற்று பழங்குடி மக்களுடன் நடனமாடிய வீடியோவைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன்.
காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அண்மையில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

சூரத் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கியதால் மீண்டும் எம்.பி பதவியை பெற்றார். அதன்பிறகு நாடாளுமன்றம் சென்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீதும் மத்திய பாஜக அரசின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மீண்டும் எம்.பி பதவியைப் பெற்ற பிறகு முதல்முறையாக தனது சொந்த தொகுதியான வயநாட்டிற்கு ராகுல் காந்தி சென்றார். இதற்காக நேற்று காலை டெல்லியில் இருந்து இன்டிகோ விமானம் மூலம் கோவை வந்தடைந்த ராகுலுக்கு, தமிழ்நாடு மற்றும் கேரள காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராகுல் பயணத்தின் ஒரு பகுதியாக ஊட்டி அருகேயுள்ள முத்தநாடு கிராமத்தில் தோடர் பழங்குடியின மக்களை சந்தித்துப் பேசினார். ராகுலுக்கு அவர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கினர். தோடர் இன மக்களின் பாரம்பரிய உடையை விரும்பி அணிந்துகொண்ட ராகுல் காந்தி, அவர்களுடன் இணைந்து நடனமாடினார். இதுதொடர்பாக வீடியோக்கள், சமூக வலைதளங்களில் பரவின.
பாரதப் பிரதமர் @narendramodi பாராளுமன்றத்தில் சிரிக்கிறார் என்று திட்டமிட்டு பொய்யான அவதூறு பரப்புகிறார்.. இபபோது மணிப்பூரை மறந்து நடனம் ஆடுகிறார்.. ராகுல் காந்தி. இதை என்னவென்று சொல்வது @blsanthosh pic.twitter.com/KBxhKA3IRb
— Karu.Nagarajan (@KaruNagarajan) August 13, 2023
இதுதொடர்பான வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ள தமிழ்நாடு பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், "பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் சிரிக்கிறார் என்று திட்டமிட்டு பொய்யான அவதூறு பரப்புகிறார். இபபோது மணிப்பூரை மறந்து நடனம் ஆடுகிறார் ராகுல் காந்தி. இதை என்னவென்று சொல்வது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப் பதில் அளித்துப் பேசியது குறித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது பேசிய அவர், "பல மாதங்களாக மணிப்பூர் பற்றி எரிந்து வருகிறது. கொலை, பாலியல் வன்கொடுமைகள் தொடர்கின்றன. ஆனால், நாடாளுமன்றத்தின் மத்தியில் அமர்ந்துகொண்டு வெட்கமின்றி நகைச்சுவையாகப் பேசிச் சிரிக்கிறார் பிரதமர் மோடி." எனக் காட்டமாக கூறியிருந்தார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications