Periyar Issue: 'ஜாதி' பார்த்து தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி பெரியார் பற்றி பேசலாமா? சீமான்
சென்னை: ஜாதி ஓட்டுகளுக்காக தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, பெரியார் பற்றி பேசுவதற்கு தகுதி இருக்கிறதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். தம்மை கூலிக்காக பெரியாரை இழிவுபடுத்துகிறார் என விமர்சித்ததற்காக கனிமொழியிடம் சீமான் இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: பெரியாரை இழிவுபடுத்தும் கூலிகள் என கனிமொழி கூறுவது அவரது அப்பாவைத்தான் (கருணாநிதி), திமுகவின் நிறுவனர் பேரறிஞர் அண்ணாவைத்தான். நான் பெரியாரை இழிவுபடுத்தவில்லை. பெரியார் என்ன பேசி இருந்தாரோ, எழுதி இருந்தாரோ அதை எடுத்து பேசுகிறேன்.

பெரியாரைப் பற்றி பேசும் கனிமொழி உள்ளிட்ட பெருமக்கள், பெரியார் என்ன பேசினார்? என்பதை எடுத்து பேச துணிவு இல்லை. பெரியார் யார் தெரியுமா? பெரியார் யார் தெரியுமா? என கேட்கிறீர்கள்.. எங்களுக்குதான் தெரியவில்லை.. சொல்லுங்க என்றால் சொல்லவும் மறுக்கிறீர்கள்.
பெரியாரை கருணாநிதி, அண்ணாவைவிட யாராவது இழிவாகப் பேசி இருக்கிறார்களா? அம்மையார் கனிமொழி அவர்களே! நீங்கள் பேசுகிற பெரிய கூலி உங்க அப்பாதான்.. அப்ப உங்க அப்பாவைத்தான் எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
கனிமொழி ஒரு பெரியாரிஸ்டா? அப்புறம் ஏன் மருமகன் உதயநிதி நெற்றியில் திருநீறு பூசி விட்டீர்கள்? நீங்கள் கடவுள் மறுப்பாளரா? உங்க கட்சி பெண்களுக்கு கொடுத்த முன்னுரிமை என்ன? பெரியார் எங்கே ஜாதி ஒழிப்பை நிலைநாட்டி இருக்கிறார்?
தமிழ்நாட்டில் இத்தனை தொகுதிகள் இருக்கும்போது, தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிட்டதற்கு காரணம் சொல்ல முடியுமா? காரணம் என்ன? சென்னை, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், விழுப்புரத்தில் போட்டியிடாமல் ஏன் தூத்துக்குடியில் போட்டியிட்டீர்கள்? ஜாதி ஒழிப்புக்காகவா? அங்கே ஏமாந்த பாவப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என்பதால்தானே.. உங்களை இன்னமும் அந்த மக்கள் தன் ஜாதிக்காரன் என நம்புகிறான் பாருங்க.. அந்த அளவுக்கு அந்த மக்களை
பைத்தியக்கார மக்களாக்கி வைத்திருக்கிறீர்கள்?
தூத்துக்குடியில் 2 முறை ஏன் போட்டியிட்டீர்கள்? கருணாநிதி மகள் கனிமொழி எப்படி நாடாராக முடியும்? அப்ப மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின் எல்லாம் நாடாரா? ஒரு அப்பாவுக்கு இரண்டு ஜாதி இருக்குமா? அப்புறம் எதுக்காக தூத்துக்குடியில் போட்டியிட்டீர்கள்? நீங்க பெரியார் பற்றி பேச தகுதி இருக்கிறதா? சும்மா கூலி.. காலி என சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. இவ்வாறு
சீமான் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications