இன்று சொந்த ஊர் செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்! மதுரை டூ பெரியகுளம்! வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு!
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் கிடைத்த தீர்ப்பால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் இன்று அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு செல்கிறார்.
Recommended Video
சென்னையிலிருந்து மதுரை வரை விமானம் மூலம் செல்லும் அவர் அங்கிருந்து கார் மூலம் பெரியகுளம் செல்லவுள்ளார்.
இந்நிலையில் மதுரையிலிருந்து பெரியகுளம் வரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்ததை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் மிகுந்த உற்சாகமாக காணப்படுகிறார். தன்னை சந்திக்க வரும் ஆதரவாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரிடமும் மகிழ்ச்சி பொங்க பேசி அவர்களை அனுப்பி வைக்கிறார். இந்நிலையில் இன்று அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் புறப்பட்டுச் செல்லும் அவர் அங்கு மூன்று நாட்கள் இருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பண்ணை வீடு
மூன்று நாட்களுமே பெரியகுளம் அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் தீவிர டிஸ்கஷன் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மதுரையிலிருந்து பெரியகுளம் வரை மிக உற்சாக வரவேற்பு கொடுக்க அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுப்பேற்றும் வகையில் இதற்கான ஏற்பாடுகளை ரவீந்திரநாத்தும், ஜெயபிரதீப்பும் முன் நின்று கவனித்திருக்கின்றனர்.

நேற்று ஆலோசனை
இதனிடையே நேற்று வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமியின் அடுத்தக் கட்ட நகர்வு என்னவாக இருக்கும், அதை எப்படி முறியடிப்பது என்பது பற்றி மிகத் தீவிரமாக ஆலோசித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக என்னவெல்லாம் செய்வார் என்பதை அவருக்கு விளக்கிக் கூறிய வழக்கறிஞர் டீம், அதையும் ஒரு கை பார்த்துவிடலாம் என நம்பிக்கை அளித்திருக்கிறது.

குலதெய்வம் கோவில்
நாம் ஏற்கனவே கூறியிருந்ததை போல் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே செண்பகத்தோப்பில் உள்ள தனது குலத் தெய்வக் கோவிலான வனப்பேச்சியம்மன் கோவிலுக்கும் ஓ.பி.எஸ். செல்லவிருக்கிறார். தென் மாவட்டங்களை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் பலரும் பெரியகுளம் சென்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்!












Click it and Unblock the Notifications