அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். ஓபிஎஸ் வழக்கு இன்று விசாரிக்கப்பட உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதனை எதிர்த்து அதிமுக ஓபிஎஸ் அணியின் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்க, ஜேசிடி பிரபாகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு ஞாயிற்றுக்கிழமையான நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம்; ஆனால் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டது. அத்துடன் அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கு விசாரணை வரும் 22-ந் தேதி முதல் விசாரிக்கப்பட்டு மார்ச் 24-ல் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் விசாரிக்க வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்று மார்ச் 23-ந் தேதி சசிகலா வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த தடை விதிக்க கோரி ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். ஓபிஎஸ் சார்பாக மனோஜ் பாண்டியன் தொடர்ந்த இந்த வழக்கு அவசர வழக்காக இன்று விசாரிக்கப்படுகிறது.
-
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications