தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் என்னை தண்ணீர் பாட்டில் கொண்டு வீசி வெளியேற்றினார்கள் எனவும், அப்போது தொலைந்த எனது சிரிப்பு மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த போது தான் திரும்ப கிடைத்தது என ஓ பன்னீர் செல்வம் இன்று கூறினார். கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் பற்றி தற்போது ஓ பன்னீர் செல்வம் நினைவுப்படுத்தி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமியின் பேரன், திமுக அயலக அணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வீராசாமியின் மகனின் திருமண விழா சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் (மண்டபம்) என்ற திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி, ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

O Panneerselvam Recalls AIADMK General Council Incident Says MK Stalin Helped Him Regain His Smile

தண்ணீர் பாட்டில் கொண்டு வீசி வெளியேற்றினர்

அப்போது ஓ பன்னீர் செல்வம் பேசுகையில், இதே மன்றத்தில் தான் என்னை தண்ணீர் பாட்டில் கொண்டு வீசி வெளியேற்றினார்கள் எனவும், அப்போது தொலைந்த எனது சிரிப்பு மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த போது தான் திரும்ப கிடைத்ததாக கூறினார். ஓ பன்னீர் செல்வம் பேசியதாவது:-

இந்த மன்றத்தில் நான் பொதுக்குழுவில் கலந்துகொண்ட நிகழ்வு நடைபெற்றது. இங்கு நடந்த பொதுக்குழுவில் பங்கேற்றபோது தான் என்னை தண்ணீர் பாட்டில் கொண்டு வீசி வெளியேற்றினார்கள்.(ஓ பன்னீர் செல்வம் இப்படி கூறியதும், ஸ்டாலின் தனது மனைவியை பார்த்து தலையசைத்தார்) அன்றைய தினம் என்னுடைய சிரிப்பே போனது. இந்த மன்றத்தில் வைத்து எனது சிரிப்பு தொலைந்துபோனது. இதே மன்றத்தில் இன்றைக்கு தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையை ஏற்று நிற்கிறேன். எப்போது நான் திமுக தலைமையை ஏற்றேனோ, அன்றைக்கே தொலைந்து போன எனது சிரிப்பு வந்துவிட்டது. இதனை மீட்டு தந்தவர் தலைவர் ஸ்டாலின் தான்.

விரைவில் விடிவுகாலம் வர வேண்டும்

எங்கிருந்து நான் அரசியலுக்கு புறப்பட்டேனோ அங்கேயே வந்து சேர்ந்து இருப்பது எனக்கு மன நிறைவை தருகிறது. அண்ணா எப்படியோ அதே போன்று தான் தலைவர் ஸ்டாலினும், எல்லாரையும் அரவணைத்து செல்கிறார். தமிழகத்தில் எல்லாரையும் அரவணைப்போடு அழைத்து செல்லும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான்.

எதோ ஒரு பிம்பத்தை பார்த்து மக்கள் ஆட்சியை தேர்ந்தெடுத்துவிட்டார்கள். ஒரு மாத ஆட்சியை பார்த்து எதோ இழந்துவிட்டோமோ என்று மக்கள் நினைக்கிறார்கள். இன்னும் நான்கரை ஆண்டுகள் எப்படி இருக்குமோ என நினைக்கும் அளவுக்கு மக்கள் மனநிலை மாறிவிட்டது. கூடிய விரைவில் ஒரு விடிவுகாலம் வர வேண்டும் என்று சொன்னால் அது தலைவர் மு.க ஸ்டாலின் ஆள வேண்டும்.." இவ்வாறு அவர் பேசினார்.

பொதுக்குழுவில் நடந்தது என்ன?

அதிமுகவில் எடப்பாடி மற்றும் ஓ பன்னீர் செல்வம் இடையே ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்தது. இதில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தின்போது, ஓ. பன்னீர்செல்வத்தை நோக்கி அதிமுக தொண்டர்கள் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் காகிதங்களை வீசி எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஓ பன்னீர் செல்வம் பொதுக்குழுவுக்கு காரில் வரும்போதே ஒரு தரப்பினர் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அவரை நிர்வாகிகள் வெளியே போகுமாறும் துரோகி என்றும் கூறி கோஷமிட்டனர். பின்னர் ஓபிஎஸ், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மேடையிலிருந்து வெளியேறினர். அப்போது ஓ பன்னீர் செல்வத்தின் மீது ஒருவர் தண்ணீர் பாட்டிலை வீசினார். நல்லவேளையாக அவர் மீது படுவதற்குள் ஜேசிடி பிடித்துவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+