உடைந்துபோய் கண்ணீர் விட்டு அழுத ஓபிஎஸ்: அணைத்து தேற்றிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மரணத்தையடுத்து முதல்வர் ஸ்டாலின் இன்று காலை மருத்துவமனைக்கு சென்று இரங்கல் தெரிவித்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். கடந்த இரண்டு வாரமாக சென்னை ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதையடுத்து ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மரணத்திற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

கண்ணீர்
ஓ. பன்னீர்செல்வமின் மனைவி விஜயலட்சுமியின் உடல்நிலை கடந்த வாரம் லேசாக முன்னேற்றம் அடைந்த நிலையில் இன்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதனால் மனைவியின் இறப்பு செய்தி கேட்டு மருத்துவமனைக்கு விரைந்த ஓ. பன்னீர்செல்வம் உடைந்து போய் கண்ணீர்விட்டு அழுதார். எதிர்பாராமல் திடீரென நிகழ்ந்த மரணத்தால், ஓபிஎஸ் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர்விட்டார்.

மகன்
அவரது மகன் எம்பி ரவீந்திரநாத் உணர்ச்சிகளை பொதுவில் வெளிப்படுத்தாமல் கொஞ்சம் திடகாத்திரமாக இருந்தார். இந்த செய்தி வெளியானதும் அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு வர தொடங்கினார்கள். அவர்களை ரவீந்திரநாத்தான் அழைத்து பேசினார். ஆனால் அங்கு நின்று கொண்டு இருந்த ஓ. பன்னீர்செல்வத்தால் துக்கத்தை அடக்க முடியவில்லை.

கண்ணீர்
தொடர்ந்து அவர் கண்ணீர் வடித்தப்படி இருந்தார். இதையடுத்து அங்கு வந்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி ஆகியோரை ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ஓ பன்னீர்செல்வத்திடம் சென்று அவரை அணைத்து ஆறுதல் கூறினார்.

ஆறுதல்
மனைவியின் மரணம் குறித்து ஸ்டாலின் விசாரித்தவுடன் திடீரென உடைந்து போன ஓ. பன்னீர்செல்வம் கண்ணீர்விட்டு பேச தொடங்கினார். அவர் இப்படி உடைந்து அழுதது பலருக்கும் வருத்தத்தை கொடுத்தது. பொதுவாக பெரிய தலைவர்கள் இதுபோன்ற துக்க நிகழ்வுகளில் இறுக்கமாக இருப்பார்கள், ஆனால் ஓபிஎஸ் உடைந்து அழுதது அவர் மனைவி மீது அவர் வைத்திருந்த அளவற்ற அன்பை காட்டுவதாக இருந்தது.
-
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications