ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.. பீகார் வெற்றிக்கு மோடிக்கு வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பீகார் சட்டசபை தேர்தல் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் டுவிட்டரில் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து கூறியுள்ளார்.
பாஜக-ஜேடியூ கூட்டணி பீகாரில் 125 தொகுதிகளை வென்று ஆட்சியை பிடித்துள்ளது.


இதுகுறித்து டுவிட்டரில் ஓபிஎஸ் கூறுகையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளுடன், பெரும்பான்மை பலத்தோடு வென்றதில் பெரும் மகிழ்ச்சி. இதற்காக எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதிஷ் குமாருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications