பேசமுடியாத நிலையில் ஓபிஎஸ்.. சட்டென ரவீந்திரநாத் கையை பிடித்து.. உருக்கமாக விசாரித்த சசிகலா: கண்ணீர்
சென்னை: சென்னை தனியார் மருத்துவமனையில் அதிமுக எம்பி ஓபி ரவீந்திரநாத் கையை பிடித்து சசிகலா விசாரித்தார். ஓ. பன்னீர்செல்வம் மனைவியின் மரணத்தையொட்டி சசிகலா இன்று நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.
Recommended Video
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி இன்று காலை மரணம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இன்று ஓபிஎஸ் மனைவியின் மறைவிற்கு வந்தவர்களை எல்லாம் அவரின் மகன் எம்பி ஓபி ரவீந்திரநாத்தான் அழைத்து பேசினார். பல்வேறு தலைவர்கள் வரிசையாக வந்த நிலையில் ஒவ்வொருவரையும் தனியாக அழைத்து ரவீந்திரநாத்தான் பேசினார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ் உடைந்து போய் அழுது கொண்டு இருந்தார். இதனால் ரவீந்திரநாத் கொஞ்சம் திடமாக இருந்து தலைவர்களின் விசாரிப்புகளுக்கு பதில் சொன்னார். அப்பா ஓபிஎஸ் உடைந்து போனதால் ஓ.பி ரவீந்திரநாத்தான் முன்னே நின்று பணிகளை கவனித்துக்கொண்டார்.

கண்ணீர்
ஓபிஎஸ் தொடர்ந்து கண்ணீர்விட்டபடி இருந்ததால் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. நா தழுதழுத்தபடி சிலருக்கு மட்டும் பதில் சொன்னார். இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த சசிகலா பன்னீர்செல்வத்திடம் இரங்கல் தெரிவித்தார். அவரின் கையை பிடித்து ஆறுதல் கூறினார். ஆனால் அப்போது ஓபிஎஸ் பேச கூடிய நிலையில் இல்லை.

சந்திப்பு
சசிகலாவை பார்த்து கும்பிட்டபடி ஓபிஎஸ் தலையை மட்டும் அசைத்தார். இதையடுத்து அருகில் நின்ற ரவீந்திரநாத்தின் கையை பிடித்து சில நிமிடங்கள் தனியாக பேசினார். அவரின் அம்மாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்தும், கடைசியில் இன்று ஏற்பட்ட மாரடைப்பு குறித்தும் கேட்டார். சசிகலாவை பார்த்து கும்பிட்டபடி ஓபிஎஸ் தலையை மட்டும் அசைத்தார். இதையடுத்து அருகில் நின்ற ரவீந்திரநாத்தின் கையை பிடித்து சில நிமிடங்கள் தனியாக பேசினார். அவரின் அம்மாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்தும், கடைசியில் இன்று ஏற்பட்ட மாரடைப்பு குறித்தும் கேட்டார்.

என்ன பேசினார்
5 முதல் 10 நிமிடங்கள் இவர்கள் பேசினார்கள். திடகாத்திரமாக இருக்கும்படி சசிகலா ரவீந்திரநாத்திடம் ஆறுதல் சொன்னார். சசிகலா கையை பிடித்து இருந்த ஓ.பி ரவீந்திரநாத் லேசாக அப்போது கண்ணீர் விட்டார். சசிகலாவின் வார்த்தைகளை கேட்டதும் ஓ.பி ரவீந்திரநாத்தும் கலங்கிப்போனார். ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமியின் உடல் இன்று தேனி பெரியகுளம் எடுத்துச்செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்கு செய்யப்பட உள்ளது.
-
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி! -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
சசிகலாவை சந்தித்த கார்த்திக்.. பிரச்சாரத்திற்கு ரெடி? தெற்கில் ஆதரவை திரட்ட பிளான்! -
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா? -
இனிமே கரூர் நாங்கதான்.. அடித்து சொல்லும் அதிமுக! கோவைக்கு ஜாகையை மாற்றிய செ.பா.. செம குஷியில் வி.பா! -
"தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?".. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி! -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications