ஓடும் வண்டியில் டிரைவருக்கு அடி.. ஒன்று திரண்ட ஓலா ஓட்டுநர்கள்.. சென்னையில் போராட்டம்
Recommended Video
சென்னை: குடிபோதையில் வழக்கறிஞர்கள் எனக் கூறிக் கொண்டு கால்டாக்சி ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 100 க்கும் மேற்பட்ட கால்டாக்சி ஓட்டுநர்கள் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அனகாபுத்தூரை சேர்ந்தவர் ஓலா கால்டாக்சி ஓட்டுநர் லோகநாதன் (32), இவர் இன்று அதிகாலை 3 மணியளவில் கிண்டி ஈக்காட்டுத்தாங்கலில் சவாரி ஒன்றை எடுத்துள்ளார். காரில் ஏறிய மூவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

கார் ஆலந்தூர் நீதிமன்றம் அருகே சென்று கொண்டிருந்த போது காரில் இருந்த மூவரும் ஏசியை போடச் சொல்லி ஓட்டுநரிடம் கூறியுள்ளனர். அதற்கு ஓட்டுநர் குடிபோதையில் இருப்பதால் ஏசி போட்டால் காரில் வாசனை வரும் அதனால் போட மறுத்திருக்கிறார். இதனால் காரில் வந்த நபர்கள் தாங்கள் வழக்கறிஞர்கள் எங்களுக்கே ஏசி போட முடியாதா? எனக் கூறி கார் ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டு பின்னர் அருகில் இருந்த பால் வைக்கும் டிரே மூலம் தலையில் அடித்ததாக சொல்லபடுகிறது.
இதில் கார் ஓட்டுநருக்கு தலையில் காயமேற்பட்டது. அப்போது அவ்வழியே சென்ற ரோந்து போலீசார் அனைவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளார். காவல் நிலையத்தில் மேலும் இருவர் வந்து கார் ஓட்டுநரை மீண்டும் அடித்துள்ளனர். காவல் நிலையத்தில் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருமாறு இரு தரப்பினரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே கால்டாக்சி ஓட்டுநர் தன்னை வழக்கறிஞர்கள் அடித்து விட்டதாக வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். வீடியோவை பார்த்துவிட்டு பரங்கிமலை காவல் நிலையம் முன்பு 100க்கும் மேற்பட்ட கால்டாக்சி ஓட்டுநர் குவிந்து வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பரங்கிமலை காவல் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அனைவரும் காவல் நிலையம் அருகே காத்திருக்கின்றனர். கால் டாக்சி ஓட்டுநருக்கு தலையில் 12 தையல் போடப்பட்டுள்ளது.
பரங்கிமலை போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நிகழ்விடத்தில் சிசிடிசி காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications