சென்னை வந்த ஆம்னி பஸ்சில் நள்ளிரவில் டிரைவர் செய்த அநாகரிகம்.. விழுப்புரத்தில் நடந்த தரமான சம்பவம்
விழுப்புரம்: கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்த ஆம்னி பேருந்தில் நள்ளிரவில் டிரைவர் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து சென்னைக்கு நேற்று வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ்சில் பஸ்சை ஓட்டிய டிரைவர், தனக்கு பின் இருக்கையில் இருந்த சிறுமியை பார்த்து அநாகரிகமான செயலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. சிறுமியின் தாயார் தைரியமாக எடுத்த முடிவினால் விழுப்புரம் போலீஸ் ஸ்டேஷனில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் அந்த டிரைவர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னைக்கும் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, திருச்சி என தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து இரவு நேரங்களில் சென்னையை நோக்கி சாரைசாரையாக ஆம்னி பஸ்கள் படையெடுப்பது வழக்கம்.

பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் நிகழ்வுகள்
சொகுசான பயணம், டைமிங்கில் வண்டியை இயக்குவது ஆகியவற்றால் ஆம்னி பஸ்சில் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்கிறார்கள். கட்டணம் கூடுதலாக இருந்தாலும் கூட பிற ஊர்களுக்கு செல்லாமல் பைபாஸ் சாலைகளில் பயணித்து விரைவாக சென்று விடுவதால், பயணிகள் ஆம்னி பஸ்களை அதிகம் நாடிச்செல்கிறார்கள்.
எனினும் ஆம்னி பஸ்களை கட்டுப்பாடு இன்றி அதிவேகத்தில் இயக்குவதாகவும் சாலை விதிகளை மதிக்காமல் செல்வதாகவும் பயணிகள் மத்தியில் அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. பயணக்கட்டணமும் வார இறுதியில் அதிக அளவில் இருந்தாலும் கூட வேறு வழியின்றி பயணிகள் செல்கிறார்கள். ஆனால் ஆம்னி பேருந்துகளின் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் நிகழ்வுகள் அவ்வப்பொது நடைபெற்று வருவதாக பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.
டிரைவர் செய்த காரியம்
இந்த நிலையில்தான் கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்த பேருந்தில் நள்ளிரவில் டிரைவர் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் ஞானவேல் என்ற டிரைவர் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு கேரளாவில் இருந்து சென்னைக்கு வழக்கம் போல பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கேரளாவை சேர்ந்த 9 வயது சிறுமியும் அவரது தாயாரும் பயணித்துள்ளனர்.
சிறுமி செய்த தைரியமான செயல்
டிரைவர் இருக்கைக்கு பின்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணித்துள்ளனர். அப்போது, சிறுமியை ஆபாசமாக தனது செல்போனில் ஞானவேல் படம் பிடித்துள்ளார். இதை சிறுமி பார்த்துவிட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமி மற்றும் அவரது தாயார், அநாகரிக செயலில் ஈடுபட்ட டிரைவருக்கு தக்க பாடம் புகட்ட நினைத்தனர்.
பேருந்து விழுப்புரத்திற்கு வந்ததும், காவல் நிலையத்தில் பெண் புகராளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் டிரைவர் ஞானவேலை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications