குடும்பத்திற்கு ரூ.1 கோடி, பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு.. இந்து மக்கள் கட்சி அதிரடி தேர்தல்அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடும்பத்திற்கு ரூ. 1 கோடி கொடுத்து அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்குவோம் என்றும் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றும் இந்து மக்கள் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக என இரு கட்சிகளும் வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதுதவிர மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகளும் களமிறங்குகின்றன.

தனித்துப் போட்டி

தனித்துப் போட்டி

இந்த சட்டசபை தேர்தலில் அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி அதிமுக - பாஜக கூட்டணியிலேயே இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் இந்த கூட்டணி அமையவில்லை. அதைத்தொடர்ந்து இந்து மக்கள் கட்சி சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவித்தார். அதன்படி 71 இடங்களில் இந்து மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

இந்து மக்கள் கட்சி தேர்தல் அறிக்கை

இந்து மக்கள் கட்சி தேர்தல் அறிக்கை

இந்து மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டார். அதில், இந்து மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும் சூழலில், தமிழ்நாட்டில் இந்து சமய, சனாதன தர்மத்தின் முறைப்படி ஆட்சி நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் பசுவதைத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய்

குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய்

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 1 கோடி ரூபாய் வழங்கி மக்கள் அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்குவோம். அனைத்து இலவசத் திட்டங்களும் ரத்து செய்யப்படும். 18 வயது பூா்த்தியடைந்த பின் ஓராண்டு ராணுவப் பயிற்சி கட்டாயமாக்கப்படும். இந்து கோயில் நிர்வாகத்தை அறங்காவலர் சபை உருவாக்கி ஒப்படைக்கப்படும்.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு

ஜாதி, மத அடிப்படையிலான அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்படும். மேலும், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும். திருவண்ணாமலை, அறுபடை வீடுகள் அமைந்த நகரங்கள், ராமேஸ்வரம் போன்றவை புனித நகரங்களாக அறிவிக்கப்படும். அங்கு மது, மாமிசம், தடை செய்யப்படும். மேலும், மத மாற்ற தடை சட்டம் உள்ளிட்ட 64 வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+