தாம்பரத்தில் பயங்கரம்.. ஓடும் பைக் தீப்பிடித்து எரிந்தது.. ஓட்டி வந்தவர் தீயில் கருகி பலி!
சென்னை: நடுரோட்டில் பைக்கில் தீ பிடித்ததால், அதை ஓட்டி கொண்டு வந்தவரும் அப்படியே நெருப்பில் பற்றிக் கொண்டு எரிந்து தீயில் கருகினார். நெடுஞ்சாலையில் நடந்த சம்பவம் சென்னை நகரையே உலுக்கி உள்ளது.
அரசு பல விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வந்தாலும், இன்னமும் சாலை விபத்துக்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. சென்னையில், தாம்பரம்- மதுரவாயல் புறவழிச்சாலையில் பைக்கில் இன்று மதியம் 2 நண்பர்கள் சென்று கொண்டிருந்தனர்.
நடுரோட்டில் பைக் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரெனை பைக் தீப்பற்றி குபுகுபுவென எரிய ஆரம்பித்தது. பைக்கில் இருந்தவர்களால் உடனடியாக நிறுத்தவும் முடியவில்லை, குதிக்கவும் முடியவில்லை. மொத்தமாக பற்றி கொண்டு எரிந்ததில், இருவருமே தீயில் சிக்கி கொண்டனர்.

அதிர்ச்சி
இதில், பைக்கில் பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்தவர் சுதாரித்து கொண்டு திடீரென கீழே குதித்து தப்பி விட்டார். ஆனால் வண்டியை ஓட்டி கொண்டிருந்தவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். நண்பன் தீயில் கருகி உயிரிழப்பதை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தார் தப்பித்த அந்த நபர்.

அதிர்ச்சி
அங்கிருந்த யாரிடமும் எதுவும் பேசவில்லை. உடல் முழுவதும் தீக்காயங்களுடன் பிரம்மை பிடித்தபடியே அதிர்ச்சியில் உறைந்து உட்கார்ந்து விட்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பொதுமக்கள்
முற்றிலுமாக எரிந்து முடிந்த பைக் பிதி சாம்பலாகிவிட்டது. சாலையில் சென்றவர்கள் அனைவருமே இந்த காட்சியை கண்டு பீதி அடைந்தனர். எதற்காக பைக்கில் தீ பிடித்தது என்பது உடனடியாக தெரியவில்லை.

போலீசார் ஆய்வு
அதேபோல் பைக்கில் வந்தவர்களின் விவரமும் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications