ஓஹோ.. 36 பேரில் வெறும் 6 பேருக்குத்தான் வாய்ப்பு.. முக்கியமான விஷயத்தை மறந்த ஓபிஎஸ் - இபிஎஸ்!
லோக்சபா தேர்தலில் அதிமுகவில் மிக முக்கியமான வேட்பாளர்கள் பலருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுகவில் மிக முக்கியமான வேட்பாளர்கள் பலருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. வெறும் 6 எம்.பிக்களுக்கு மட்டுமே அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக லோக்சபா தேர்தலில் போட்டியிட தயாராகிவிட்டது. அதிமுக தமிழகத்தில் பாஜக, பாமக, தேமுதிக என்று பெரிய கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை அமைத்து இருக்கிறது.
நேற்றுதான் அதிமுக தனது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. ஆனால் இந்த வேட்பாளர் பட்டியல் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

அதிமுக எம்பி மரணம்
இந்த நிலையில் 37 தமிழக அதிமுக எம்.பிக்களில் அதிமுக எம்பி ராஜேந்திரன் கடந்த மாதம் பலியானார். சாலை விபத்தில் இவர் பலியானார். இதனால் தமிழகத்தில் அதிமுக எம்.பிக்களின் பலம் 36 ஆக குறைந்தது.

எத்தனை பேருக்கு வாய்ப்பு
இந்த நிலையில் இந்த 36 பேரில் வெறும், 6 எம்பிகளுக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. 30 எம்.பிக்களுக்கு அதிமுகவில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

பெரிய கோபம்
இது அதிமுக எம்.பிக்கள் மத்தியில் பெரிய கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமான பலர் தங்களுக்கு சீட் கிடைக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் 20 பேருக்கு மட்டுமே சீட் கொடுக்க முடியும் என்பதால் பலருக்கு வாய்ப்பு பறிபோய் இருக்கிறது .

யார் பெற்றது
லோக்சபா தேர்தலில், அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு பெற்ற எம்பிக்கள் 6 பேர் மட்டுமே. இவர்களின் விபரம் பின்வருமாறு.
தென் சென்னை- ஜெயவர்த்தன்
திருவள்ளூர் (தனி)- வேணுகோபால்
காஞ்சிபுரம் (தனி)- மரகதம் குமரவேல்
பொள்ளாச்சி- மகேந்திரன்
கரூர்- தம்பிதுரை
ஆரணி- செஞ்சி ஏழுமலை

புதிய வேட்பாளர்கள்
லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பாக புதிதாக போட்டியிடும் வேட்பாளர்கள் 14 பேரின் விபரம்.
சேலம்- சரவணன்
நாமக்கல்- காளியப்பன்
கிருஷ்ணகிரி- கேபி முனுசாமி
ஈரோடு- ஜி மணிமாறன்
திருப்பூர்- எம்எஸ்எம் ஆனந்தன்
திருவண்ணாமலை- அக்ரி கிருஷ்ணமூர்த்தி
சிதம்பரம் (தனி)- சந்திரசேகர்
பெரம்பலூர்- என் ஆர் சிவபதி
தேனி- ரவீந்திரநாத்
மதுரை- ராஜ் சத்யன்
நீலகிரி (தனி)- தியாகராஜன்
திருநெல்வேலி- மனோஜ் பாண்டியன்
நாகப்பட்டினம் (தனி)- தாழை சரவணன்
மயிலாடுதுறை- ஆசைமணி

வாய்ப்பு மறுப்பு
எம்பிக்கள் அன்வர் ராஜா, கே .பரசுராமன், எஸ்.ஆர் விஜயகுமார், கே.காமராஜ், ஆர்.பாரதி மோகன், டி.ராதாகிருஷ்னன் ஆகிய முக்கிய வேட்பாளர்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுதான் அதிமுகவில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம்
அதிமுக இந்தமுறை 39 தொகுதிகளிலும் தமிழகத்தில் போட்டியிடவில்லை. 20 தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறது. பாமக, பாஜக, தேமுதிகவுக்கு நிறைய இடங்கள் கொடுக்கப்பட்டுவிட்டதால், அதிமுகவில் முக்கியமான வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications