கொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: கொரோனா வைரஸ் அச்சத்தால் மக்கள் பீதியில் உள்ள நிலையில் அது தொடர்பான தகவல்களை தெளிவாகவும், முழுமையாகவும் தர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வார்டில் மூன்று பேர் உயிரிழந்த விவகாரத்தில் முழுமையற்ற தகவலை வெளியிட்டுள்ளதால், ஏற்கனவே அச்சத்தில் உள்ள மக்களுக்கு இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்டாலின். மேலும், இது தொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் குமரி மாவட்ட திமுக எம்.எல்.ஏ.க்களை அலைபேசி மூலம் ஸ்டாலின் அழைத்து பேசியதாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விவரம் பின்வருமாறு;
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூன்று பேர் மரணம் அடைந்ததாக வந்த செய்தியைத் தொடர்ந்து, அம்மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களைத் தொடர்புகொண்டு மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசினார்.
அரசு அதுகுறித்து தெளிவான தகவல் தரவில்லை என்று அவர்கள் கூறியதைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளரைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் கொரோனா வைரஸ் காரணமாகத்தான் இறந்தார்களா என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருவதால், அதுபற்றி அரசு தெளிவான விளக்கத்தைத் தர வேண்டும் என்றும்; இதுபோன்ற முழுமையற்ற தகவல்கள் மக்களை மேலும், மேலும் அச்சப்பட வைக்கும் என்றும் திமுக தலைவர் கூறினார்.
இதற்குப் பதிலளித்த தலைமைச் செயலாளர் "சுகாதாரத் துறைச் செயலாளர் மூலம் விரைவில் உரிய விளக்கம் அளிக்கப்படும்" என்று கூறினார்.
இதன் மூலம் தலைமைச் செயலாளருக்கே குமரி மாவட்டத்தில் நிகழ்ந்த 3 உயிரிழப்புகள் பற்றிய விவரம் தெரியவில்லை என்பது வெளிப்படுகிறது. சுகாதாரத்துறை செயலாளர் மூலம் உரிய விளக்கம் விரைவில் அளிக்கப்படும் என அவர் கூறியுள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மூவர் எப்படி உயிரிழந்தார்கள் என்ற கேள்வி வெகுஜன மக்களிடையேயும் எழுந்துள்ளது.
-
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்!












Click it and Unblock the Notifications