கொரோனா விவகாரம்... அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: கொரோனா வைரஸ் அச்சத்தால் மக்கள் பீதியில் உள்ள நிலையில் அது தொடர்பான தகவல்களை தெளிவாகவும், முழுமையாகவும் தர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வார்டில் மூன்று பேர் உயிரிழந்த விவகாரத்தில் முழுமையற்ற தகவலை வெளியிட்டுள்ளதால், ஏற்கனவே அச்சத்தில் உள்ள மக்களுக்கு இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்டாலின். மேலும், இது தொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் குமரி மாவட்ட திமுக எம்.எல்.ஏ.க்களை அலைபேசி மூலம் ஸ்டாலின் அழைத்து பேசியதாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விவரம் பின்வருமாறு;
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூன்று பேர் மரணம் அடைந்ததாக வந்த செய்தியைத் தொடர்ந்து, அம்மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களைத் தொடர்புகொண்டு மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசினார்.
அரசு அதுகுறித்து தெளிவான தகவல் தரவில்லை என்று அவர்கள் கூறியதைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளரைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் கொரோனா வைரஸ் காரணமாகத்தான் இறந்தார்களா என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருவதால், அதுபற்றி அரசு தெளிவான விளக்கத்தைத் தர வேண்டும் என்றும்; இதுபோன்ற முழுமையற்ற தகவல்கள் மக்களை மேலும், மேலும் அச்சப்பட வைக்கும் என்றும் திமுக தலைவர் கூறினார்.
இதற்குப் பதிலளித்த தலைமைச் செயலாளர் "சுகாதாரத் துறைச் செயலாளர் மூலம் விரைவில் உரிய விளக்கம் அளிக்கப்படும்" என்று கூறினார்.
இதன் மூலம் தலைமைச் செயலாளருக்கே குமரி மாவட்டத்தில் நிகழ்ந்த 3 உயிரிழப்புகள் பற்றிய விவரம் தெரியவில்லை என்பது வெளிப்படுகிறது. சுகாதாரத்துறை செயலாளர் மூலம் உரிய விளக்கம் விரைவில் அளிக்கப்படும் என அவர் கூறியுள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மூவர் எப்படி உயிரிழந்தார்கள் என்ற கேள்வி வெகுஜன மக்களிடையேயும் எழுந்துள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications