பாஜகவினர் சொல்லும் சால்ஜாப்புகள் எடுபடாது... ரயில்வே நிர்வாகம் மீது ப.சிதம்பரம் சீற்றம்
சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களை கசக்கி அவர்களிடம் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது குறித்து மே 2-ம் தேதி ரயில்வே போர்டு வெளியிட்ட உத்தரவில் 11-ம் பத்தியை (பாரா) பார்த்தால் அதில் தெளிவாக உள்ளது என்றும், குறிப்பாக 11(c) பத்தியை படிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். ட்வீட்டர் மூலம் பதிவு வெளியிட்டுள்ள அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் பாஜகவினர் சொல்லும் சால்ஜப்புகள் இனி எடுபடாது என்றும், இயல்பான காலங்களில் இருந்த இயல்பான மானியங்களை இந்த விவாதத்தில் கொண்டு வருவது திசை திருப்பும் முயற்சி என சாடியுள்ளார். தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தில் மானியம் உள்ளதாக கூறி திசை திருப்பும் முயற்சி பலிக்காது எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவ்வாறு இயக்கப்படும் ரயில்களில் தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் விவகாரம் தான் தேசிய அரசியலில் விவாதப் பொருளாக உள்ளது. தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தை காங்கிரஸ் ஏற்கும் என சோனியாகாந்தி நேற்று முன் தினம் அறிவித்த நிலையில், ரயில்வே நிர்வாகமே மானியம் அளிப்பதாக பாஜக தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இந்நிலையில் அதனைத் தொடர்ந்து பாஜகவினருக்கு பதிலடி தரும் வகையில் ப.சிதம்பரம் இன்று புதிய பதிவு ஒன்றை தனது ட்வீட்டரில் வெளியிட்டிருக்கிறார். இதனிடையே தொழிலாளர்களுக்கான கட்டணத்தை காங்கிரஸ் ஏற்கும் என்ற சோனியாகாந்தியின் முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு என ப.சிதம்பரம் தனது ட்வீட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications