ரூ20 லட்சம் கோடி- நடந்தே வீடு திரும்பிய தொழிலாளருக்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு தராது: ப. சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொருளாதார மீட்புக்காக மத்திய அரசு அறிவித்திருக்கும் ரூ20 லட்சம் கோடி அறிவிப்பை முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

P Chidambaram questions Centre on Rs 20 Lakh Crore Package

ரூ 20 லட்சம் கோடி என்று பிரம்மாண்டமான அறிவிப்பு. ஆனால் புலம் பெயர்ந்து நடந்தே வந்து வீடு திரும்பிய தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் கூடத் தரமாட்டார்கள்.

மக்கள் தொகையில் கீழ்ப் பாதியில் இருக்கும் 13 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ 5,000 கொடுங்கள் என்று சொல்கிறோம். ஏழைக் குடும்பங்களுக்கு அரசு ஒரு ரூபாய் கூடத் தர மறுக்கிறது.

P Chidambaram questions Centre on Rs 20 Lakh Crore Package

இந்த நாட்டின் ஏழைகள் இருந்தால் என்ன, மடிந்தால் என்ன என்று நினைக்கும் அரசு நம்மை ஆள்கிறது. அத்தனை தடைகளையும் வீடு வந்து சேர்ந்திருக்கும் இடம் பெயர் தொழிலாளர்களுக்கு இப்போது கிராமத்தில் வேலை இல்லை. வருவாய் இல்லை. அந்த தொழிலாளியின் குடும்பம் எப்படி வாழ முடியும்? இவ்வாறு ப. சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+