சிலம்பம் என்பது.. வெறும் விளையாட்டு மட்டுமல்ல! 32 ஆண்டுகளாக இலவச பயிற்சி.. யார் இந்த பழனிவேல்
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில், 2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தை சேர்ந்த 5 கலைஞர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதில் புதுச்சேரி சிலம்ப கலைஞர் பழனிவேல் கவனம் பெற்றிருக்கிறார்.
புதுச்சேரியின் பூரணாங்குப்பத்தை சேர்ந்த பழனிவேல்.. இப்பகுதி இளைஞர்களுக்கு கடந்த 32 ஆண்டுகளாக இலவசமாக சிலம்பம் கலையை கற்பித்து வருகிறார்.

"சிலம்பம் என்பது வெறும் விளையாட்டு மற்றும் கிடையாது. உடல் ஆரோக்கியம், மன தைரியம், நல்லொழுக்கம் இவற்றை மேம்படுத்தக்கூடிய ஒரு கலை. அதிலும் வீரத்துடன் கூடிய சிலம்பம், பயிற்சியை கற்கும் போது.. இன்னுமே தைரியம் அதிகரிக்கும் இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.
இந்த நவீன காலங்களில்.. சிலம்ப பயிற்சி என்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது. இதற்கான ஆசிரியர்களும் குறைந்த அளவிலே இருக்கின்றனர். எனவே, இந்த கலையை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல.. எங்களை போன்ற ஒரு சிலர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்" என்று பழனிவேல் சிலம்பம் குறித்து கூறியிருக்கிறார்.
கடந்த 1994 ஆம் ஆண்டு முதல், கிராமத்தில் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சியை இலவசமாக பழனிவேல் கற்றுக் கொடுத்து வருகிறார். அதிலும் கலந்த 24 ஆண்டுகளாக 45 நாட்கள் நடைபெறும் கோடைகால பயிற்சி முகாமை இலவசமாக நடத்தி வருகிறார். இந்த முகாமில் ஆண்டுதோறும் ஏறக்குறைய 100 பேர் வரை பயிற்சி வருகின்றனர் இதுவரை 13க்கும் அதிகமான மாஸ்டர்கள் உருவாகி இருக்கின்றனர்.
ஆண்டு தோறும் சிலம்பக் கலை விழா நடத்தி, பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றுகளும் விருதுகளையும் அளித்து அவர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார் பழனிவேல்.
டெல்லி, அந்தமான், லட்சத்தீவு போன்ற பல்வேறு இடங்களுக்கு சென்று.. நாட்டுப்புற கலைகளில் சிலம்ப கலையை கற்பித்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு புதுச்சேரி அரசு இவருக்கு நாட்டுப்புற கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications