Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை! சென்னை ஐகோர்டில் சிபிசிஐடி தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணைக்குப் பெற்றோர் ஒத்துழைப்பதில்லை என்று சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி கனியாமூரில் பகுதியில் இயங்கி வரும் சக்தி பள்ளியில் கடந்த ஜூலை மாதம் மாணவி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தார்.

அந்த மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகப் பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறிய நிலையில், இருப்பினும் இதை மாணவியின் பெற்றோர்கள் ஏற்க மறுத்தனர்.

 மாணவி மரணம்

மாணவி மரணம்

தங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதால் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். இது தொடர்பாக ஜூலை மாதம் நடந்த பேரணியில் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது அந்தப் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை மீது சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வழக்கு

வழக்கு

இதற்கிடையே பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு விரைவில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி தரப்புக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கேள்வி

கேள்வி

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்றக்கோரி கோரிக்கை விடுத்த நிலையில் வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவதால் இந்த மனுவை ஏன் முடித்து வைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

 கோரிக்கை

கோரிக்கை

இதற்குப் பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையைக் கண்காணித்து வருகிறது. ஏற்கனவே இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், வழக்கு தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கை தொடர்பான வீடியோ காட்சிகள் அடங்கிய குறுந்தட்டை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

 ஒத்துழைக்க மறுப்பு

ஒத்துழைக்க மறுப்பு

ஏற்கனவே, இந்த வழக்கின் புலன் விசாரணை முடியும் வரை வழக்கு தொடர்பான ஆவணங்களை மாணவியின் பெற்றோர் தரப்புக்கு வழங்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதைச் சுட்டிக்காட்டிய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், வழக்கின் புலன் விசாரணைக்கு மாணவியின் பெற்றோர் ஒத்துழைக்க மறுப்பதாகவும் விடுதியில் மாணவி பயன்படுத்திய மொபைல் ஃபோனை வழங்க மறுப்பதாகவும் மரபணு சோதனைக்கு மாதிரிகள் வழங்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

 உத்தரவு

உத்தரவு

இதையடுத்து, மாணவி செல்போன் பயன்படுத்தி இருந்தால் அதைப் புலன் விசாரணை செய்யும் சிபிசிஐடி போலீசாரிடம் வழங்க வேண்டும் என மாணவியின் பெற்றோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடுத்த அறிக்கையை அக்டோபர் 10ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+