நாடாளுமன்ற தாக்குதல்- பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே- கேள்வி கேட்ட நாங்கள் வெளியே-சு.வெங்கடேசன்
சென்னை: நாடாளுமன்றத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாஸ் கொடுத்த பாஜக எம்பி சபைக்குள் இருக்கிறார்; ஆனால் காரணம் கேட்ட நாங்கள் சபைக்கு வெளியே இருக்கிறோம் என சு.வெங்கடேசன் எம்பி காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நாடாளுமன்ற லோக்சபாவுக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தியது; நாடாளுமன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்தது உள்ளிட்ட சம்பவங்கள் நாட்டை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இச்சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது வரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்துக்குள் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பாஸ் கொடுத்தார் என்பது புகார். அதனால் பிரதாப் சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; நாடாளுமன்றப் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி அல்லது மத்திய அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வேண்டும் என லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். இதனால் லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மேலும் ராஜ்யசபா, லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டதாக மொத்தம் 14 எம்.பிக்கள் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு எம்பிக்களான கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி இருந்தனர்.
பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே!
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 15, 2023
பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே!
அவையில் மட்டுமல்ல..
பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது.
ஆனால் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பார்வையாளர்களை இன்றும்… pic.twitter.com/sFoQFl7kqV
தமிழ்நாட்டு எம்பிக்களான கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி இருந்தனர்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் எம்பி தமது எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது: பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே! பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே! அவையில் மட்டுமல்ல.. பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது. ஆனால் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பார்வையாளர்களை இன்றும் அனுப்பிவைத்து அவைக்கு பெருமைசேர்க்கலாம். இது தான் பாஜகவின் பாராளுமன்ற மரபு. இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி பதிவிட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications