Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடாளுமன்ற தாக்குதல்- பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே- கேள்வி கேட்ட நாங்கள் வெளியே-சு.வெங்கடேசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்றத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாஸ் கொடுத்த பாஜக எம்பி சபைக்குள் இருக்கிறார்; ஆனால் காரணம் கேட்ட நாங்கள் சபைக்கு வெளியே இருக்கிறோம் என சு.வெங்கடேசன் எம்பி காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

நாடாளுமன்ற லோக்சபாவுக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தியது; நாடாளுமன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்தது உள்ளிட்ட சம்பவங்கள் நாட்டை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இச்சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது வரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 Parliament Attack: Su.Venkatesan urges take action against BJP MP Pratap Simha

நாடாளுமன்றத்துக்குள் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பாஸ் கொடுத்தார் என்பது புகார். அதனால் பிரதாப் சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; நாடாளுமன்றப் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி அல்லது மத்திய அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வேண்டும் என லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். இதனால் லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மேலும் ராஜ்யசபா, லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டதாக மொத்தம் 14 எம்.பிக்கள் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு எம்பிக்களான கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி இருந்தனர்.

தமிழ்நாட்டு எம்பிக்களான கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி இருந்தனர்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் எம்பி தமது எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது: பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே! பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே! அவையில் மட்டுமல்ல.. பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது. ஆனால் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பார்வையாளர்களை இன்றும் அனுப்பிவைத்து அவைக்கு பெருமைசேர்க்கலாம். இது தான் பாஜகவின் பாராளுமன்ற மரபு. இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+